ஆப்நகரம்

வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி - விசாரணையில் பகீர்

வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவிகள் இரண்டு பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 4 Aug 2022, 6:11 pm
சென்னை, வேப்பேரியில் பிரபலம் வாய்ந்த அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியின் அருகில் மாணவ, மாணவிகளின் விடுதிகள் இருக்கின்றன. இங்கு, வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில், விடுதியில் உள்ள மாணவிகள் இரண்டு பேர் நேற்று தற்கொலை முயற்சி செய்து மயங்கியுள்ளனர்.
Samayam Tamil chennai students suicide attempt


இதை ஹாஸ்டல் மாணவிகள் கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்து உடனடியாக இருவரும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மருத்துவர் பரிசோதனையில், இரண்டு மாணவிகளும் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்தது தெரிய வந்தது. அதை மாணவிகளே கலந்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்ததும் தெரிந்தது. சம்பவம் குறித்து பெரியமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவிகளிடம் விசாரித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், மாணவிகளிடம் மற்ற மாணவ, மாணவிகளும், கல்லூரி பேராசிரியர்களும் பேசாமல் அவர்களை ஒதுக்கி வைத்ததாகவும் அதனால் மன உளைச்சலில் இருந்து வந்த மாணவிகள்
மெர்குரி சல்பைட்டை சாப்பிட்டு தற்கொலை முடிவை எடுத்ததாக தெரிய வந்துள்ளது. சிகிச்சைக்கு பிறகு இரு மாணவிகளும் தற்போது நலமாக உள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கம்பீரமா ராம்ப் வாக் சென்ற காவலர்கள்... வெவ்வேறு இடங்களுக்கு தூக்கியடிப்பு..!

தமிழகத்தில் மாணவ- மாணவிகள் தற்கொலை செய்துகொன்டு உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் தீர்வல்ல... யாரேனும் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொண்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் இருப்பது பற்றி உங்களுக்குத் தெரிய வந்தாலோ தயவுசெய்து மாநில சுகாதாரத் துறையின் உதவி எண் 104 அல்லது 'சினேகா தற்கொலை தடுப்பு மையம்: 044-24640050 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.

அடுத்த செய்தி