ஆப்நகரம்

200 கோடி ரூபாய் மோசடி... ஏமார்ந்த மக்கள் ஒன்று கூடியதால் ஸ்தம்பித்த மதுரை

திருச்சியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் மோசடி செய்ததை கண்டித்து பாதிக்கப்பட்ட மக்கள் மதுரை ஒத்தக்கடையில் சாலை மறியல் தள்ளுமுள்ளு - பரபரப்பு

Samayam Tamil 21 Feb 2022, 3:44 pm
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ராஜா, அவரது சகோதரர் ரமேஷ் ஆகிய இருவரும் கடந்த 2013ம் ஆண்டு முதல் பல்வேறு பெயர்களில் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். அதில் முதலீடு செய்பவர்களுக்கு இரட்டிப்பு பணம் தருவதாக கூறியும், பல்வேறு கவர்ச்சி திட்டங்களை கூறி சுமார் 200 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
Samayam Tamil madurai news


இந்த மோசடி சம்பவம் குறித்து ராஜா, ரமேஷ் உள்ளிட்ட 15 பேர் மீது திருச்சி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் மோசடியில் பாதிக்கப்பட்ட சுமார் 500க்கும் மேற்பட்டோர் தங்களது பணத்தை மீட்டுத்தரக் கோரியும் மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் அவர்களுக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் மதுரை ஒத்தக்கடையிலிருந்து உயர்நீதிமன்ற மதுரை கிளையை நோக்கி பேரணியில் ஈடுபட முயன்றனர்.

தஞ்சை மாணவி வழக்கு: விசாரணையை தொடங்கிய சிபிஐ..!

அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் மதுரை ஒத்தக்கடை பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி