ஆப்நகரம்

பல லட்ச ரூபாய் மோசடி செய்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கார் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கபட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

Samayam Tamil 27 May 2019, 4:17 pm
கோவை அருகே பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கார் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கபட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Samayam Tamil பல லட்ச ரூபாய் மோசடி செய்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
பல லட்ச ரூபாய் மோசடி செய்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!


கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் வெங்கடேஷ் என்பவர் விஜிம் என்ற தனியார் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு, நாளிதழ்கள் மூலம் மாதம் பத்தாயிரம் வருமானம் பெற ஒப்பந்த வாகனம் தேவை என்ற விளம்பரம் செய்து உள்ளார்.

இதனை நம்பி கோவை, ஈரோடு, பொள்ளாச்சி, சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 38 வாகங்களை ஒப்பந்த அடிப்படையில் கொடுத்து உள்ளனர். வெங்கடேஷூம் ஏழு மாதங்கள் முறையாக பணத்தை அளித்துள்ளார்.

பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மோசடி குற்றவாளி


இதனிடையில் கண் பார்வையற்றோர் மற்றும் முதியவர்களுக்கு உதவ அறக்கட்டளை துவக்க இருப்பதாக கூறி, தலா மூன்று லட்சம் ருபாய் அனைவரிடமும் தலா ரூ.3 லட்சம் வாங்கியுள்ளார். பின்னர் பணம் கொடுக்காமல் பல்வேறு காரணங்கள் கூறி, காலம் தாழ்த்து வந்தார். இதனால் சந்தேகமடைந்தவர்கள், துடியலூர் காவல் நிலையத்தில் 2018-ம் ஆண்டு புகார் அளித்துள்ளனர்.

அப்போது விரைவில் பணத்தை திருப்பி தருவதாகவும், ஒப்பந்த வாகங்கனளை விற்க விரும்புவோரிடம் முழு பணமும் கொடுத்து தானே வாங்கி கொள்வதாக வெங்கடேஷ் உறுதி அளித்துள்ளார். இதன் பின்னரும் பணம் கிடைக்க பெறாததால் மாவட்ட கண்கானிபாளரிடம் 2019ல் மீண்டும் புகார் அளித்ததை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யபட்டது.

தற்போது வெங்கடேஷ் தலைமறைவாக உள்ளதால் அவரை கைது செய்து தங்களது பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கபட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் இன்று மனு அளித்தனர்.

அடுத்த செய்தி