ஆப்நகரம்

பாம்பு கறியை வெட்டி சமைக்கும் கிராமத்து கிறில்ஸ், வனத்துறையினர் தீவிர விசாரணை

மேட்டூர் அடுத்த தங்காபுரிபட்டிணம் பகுதியில் பாம்பை வெட்டி சமையல் செய்து சாப்பிடும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரவவிட்ட இளைஞர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Samayam Tamil 18 Sep 2020, 9:28 pm
சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சியின் தங்காபுரி பட்டிணம் வட பத்ர காளியம்மன் கோவில் பகுதியில் 4 இளைஞர்கள் சேர்ந்து 6 அடி நீளமுள்ள பாம்பை மீன் வெட்டுவதை போல் வெட்டி சமையல் செய்து சாப்பிட்டனர்.
Samayam Tamil snake cooking


இதனை மொபைல் போனில் படமாக எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்பி உள்ளனர். இந்த வீடியோ மேட்டூர் பகுதிகளில் வைரலாக பரவி வருகிறது. இந்த தகவல் அறிந்த வனத்துறையினர் பாம்பை சமையல் செய்து சாப்பிட்ட இளைஞர்களை தேடி வருகின்றனர்.

கிராம புறங்களில் வன விலங்குகளை வேட்டையாடி சமைப்பதை போல சாரை பாம்புகளையும் கொன்று சமைத்து சாப்பிடும் வழக்கமும் சிலரிடையே உள்ளது.

குளிக்கும் வீடியோ, பாலியல் தொந்தரவு - கோவை மாணவி தற்கொலையில் திருப்பம்

ஆனால், செல்போனில் வீடியோ எடுத்து பகிர்ந்ததன் மூலமாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த மாதிரியான செயல்கள் பலரை ஊக்குவிக்கலாம் என்றும் உடனடியாக சம்மமந்தப்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவென்றும் என்றும் வன ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி