ஆப்நகரம்

புல்லட் வண்டியில் வந்து பிச்சை எடுக்கும் தி.நகர் போலீஸ்... தள்ளு வண்டிக்கு 50 ரூபாய்..!

தி.நகர் பனகல் பார்க்கில் உள்ள சிறுகடைகளில் பிச்சை எடுக்கும் போலீஸ் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 4 Dec 2021, 10:16 pm
சென்னை டி.நகர் நடேசன் பார்க் பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரத்தில் தள்ளு வண்டிகளில் உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், தொழிலாளிகள் மற்றும் ஓட்டுனர்கள் என பலரும் குறைந்த செலவில் உணவு சாப்பிட்டு வருகின்றனர்.
Samayam Tamil police bribe


இந்த நிலையில், டிசம்பர் 4 ஆம் தேதி (இன்று) சரியாக இரவு 9.30 மணி அளவில் ஒவ்வொரு தள்ளு வண்டி கடைகளிலும் புல்லட் வண்டியில் வந்த காவலர் ஒருவர் ஒரு கடையில் 50 ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளார். அதன் பின்னர் வேறொரு கடையில் நின்று லஞ்சம் வாங்கி கொண்டு சென்றுள்ளார்.

அந்த நிகழ்வினை குறிப்பிட்ட தள்ளு வண்டியில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தவர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் ஷேர் செய்துள்ளார். இதுகுறித்து, வீடியோ நம்மிடம் பகிர்ந்த நபரிடம் கேட்டபோது, '' பனகல் பார்க் அருகே செயல்பட்டு வரும் இந்த கடையில் தினமும் இரவு சாப்பிடுவது வழக்கம். இன்று அதேபோல சாப்பிட்டு கொண்டிருந்தபோது, புல்லட் வண்டியில் காவலர் ஒருவர் வந்து நின்றார். அவர் வண்டியை விட்டு இறங்கவில்லை.


கல்யாணம் பண்ணிக்க மாற்றாரு சார்... காதலன் மீது ஜல்லிக்கட்டு ஜூலி புகார்..!

அவரை பார்த்த கடைக்காரர் கல்லாவில் இருந்து 50 ரூபாயை எடுத்து பரோட்டா மாஸ்ட்டரிடம் கொடுத்து கொடுக்க சொன்னதை கவனித்தேன். அந்த காவலர் பணத்தை வாங்கிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். பின்னர் நான் சாப்பிட்டுவிட்டு அலுவலகத்தை நோக்கி சென்றபோது அதே காவலர் நடேசன் பார்க் அருகே உள்ள சிக்னல் பக்கம் இருந்த தள்ளு வண்டி கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது கடை காரர் எதையோ மறைத்து கொடுப்பதை கவனித்தேன். அப்போது வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தேன்'' என கூறினார்.

அடுத்த செய்தி