ஆப்நகரம்

பானைக்கு ஓட்டு கேட்ட 2 பேர் அடித்துக்கொலை..! அரக்கோணத்தில் பரபரப்பு

பாமகவினரால் தாக்கப்பட்டதால் விசிகவினர் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 8 Apr 2021, 4:59 pm
அரக்கோணம் அருகே சோகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த இரண்டு பேரை பாமகவினர் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி திமுகவில் அங்கம் வகிக்கும் விசிக 6 தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டுள்ளது.
Samayam Tamil உயிரிழந்தவர்கள்


இந்நிலையில், சோகனூர் பகுதியில் பானை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து கொண்டிருந்தபோது பாமகவினரால் தாக்கப்பட்ட இரண்டு விசிக தொண்டர்கள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. மேலும், மூன்று பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏப்-10ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.


இதேபோல, திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் பெருமாள் ஏரி கிராமத்தில் பானை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு துண்டுப்பிரசுரம் கொடுத்த கதிரவன் என்ற வாலிபரை சாதி பெயரை சொல்லி, '' நீங்கள் எல்லாம் எங்களது பகுதியில் வந்து பானைக்கு ஓட்டு கேட்கிறீர்களா? என்று கூறி பாமகவினர் அவரை அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும், அவர்கள் சென்ற வாகனத்தை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் முகம், கண் உள்ளிட்ட பகுதிகளில் படுகாயமடைந்த கதிரவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் அறிந்து வந்த விசிக பிரமுகர்கள் கதிரவனுக்கு ஆறுதல் கூறி சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அடுத்த செய்தி