ஆப்நகரம்

போலீசுக்கு துப்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டி படுகொலை...

சென்னையில் முன்விரோதம் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டி படுகொலை செய்யயப்பட்டார்.

Samayam Tamil 17 Aug 2020, 3:36 pm
சென்னை தண்டையாப்பேட்டை வீரா குட்டி தெருவைச் சேர்ந்தவர் கேசவன். அப்பகுதியில் இட்லி கடை நடத்தி வந்த கேசவன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அப்பகுதி தொழிலாளர் மேம்பாட்டு நல அமைப்பாளராக பொறுப்பு வகித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று அவர் ஆடி மாச பூஜைக்காக அப்பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.
Samayam Tamil thandayarpettai murder


அப்போது அங்கு வந்த பத்து பேர் கொண்ட கும்பம் கேசவனை சுற்றி வளைத்து சராமரியாக வெட்டிவிட்டு தப்பியுள்ளது. அந்த கோர சம்பவத்தில் கேசவன் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்ததை கண்ட உறவினர்களும், அப்பகுதி மக்களும் கேசவனை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கேசவன் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து அப்பகுதி மக்கள் தெருவில் ஒன்று திரண்டதால் அசாதாரண சூழல் நிலவியது. மேலும், கேசவனை மதன் என்பவருடைய ஆட்கள்தான் கொலை செய்தனர் என்று கூறி கூச்சலிட தொடங்கினர். சம்பவம் தெரிந்து வந்த தண்டையார்பேட்டை போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்ய முயற்சித்தனர்.

அப்போது, கடந்த சில நாடகளாக அப்பகுதியைச் சேர்ந்த மதன் என்பவர் கஞ்சா, மது ஆகியவற்றை சட்ட விரோதமாக விற்று வந்ததாகவும், அதை குறித்து கேசவன் அவ்வப்போது போலீசாருக்கு தகவல் கொடுத்து வந்ததால் மதனுக்கும், கேசவனருக்கும் பகை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவம் நடந்த அன்று தனது ஆட்களோடு வந்த மதன் கேசவனை வெட்டிக்கொலை செய்துவிட்டார் என அப்பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

தாம்பரம் அருகே டிவி மேலே விழுந்து 3 வயது சிறுவன் பலி..!

மேலும், கொரோனா ஊரடங்கால் சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்படாமல் இருப்பதை பயன்படுத்திக்கொண்ட மதன், சென்னைக்கு வெளியே சென்று மொத்தமாக சரக்குகளை வாங்கி வந்து கள்ள சந்தையில் விற்று வந்ததாகவும், போலீசாருக்கு அது தெரியாமல் இருந்தது எப்படி எனவும் கேள்வி எழுப்பினர். அதை அடுத்து, கேசவன் வழக்கில் சம்மந்தப்பட்டவர்களை பிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்னர் அப்பகுதி மக்கள் களைந்து சென்றனர். இந்நிலையில் மதன், சதிஷ், கார்த்தி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி