ஆப்நகரம்

மாஸ்டர் படத்தை பார்க்காமயே போகிறேன்.. லவ் யூ தலைவா..! விஜய் ரசிகர் தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே விஜய் ரசிகர் ஒருவர் மனவிரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 14 Aug 2020, 6:21 pm
வாலிபர் ஒருவர் ஒரு வாரத்துக்கும் மேலாக ட்விட்டரில் மரண வார்த்தைகளை பதிவு செய்து வந்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்து விட்டதாக வந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் பாலமுருகன். பொறியியல் படித்து முடித்த இவர் நான்கு ஆண்டுகளாக சென்னையில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
Samayam Tamil vijay fan suicide


இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் வேலை இழந்த பாலமுருகன் மீண்டும் தனது சொந்த ஊருக்கு சென்று தங்கி வந்துள்ளார். தீவிர விஜய் ரசிகரான இவர் கடந்த சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால், தனது ஆதங்கத்தை அவ்வப்போது ட்விட்டரில் பதிவிட்டு வந்தார். '' நீங்க நினைக்கிற மாதிரி காதல் தோல்வி எல்லாம் கிடையாது.


''என்னை அனைவரும் வெறுக்கின்றனர். தளபதி படத்தை பார்க்காமலேயே செல்கிறேன். தலைவனையும் (விஜய்) பார்க்காமல் செல்கிறேன் என்று தொடர்ச்சியாக பதிவிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகளில் தற்போது தகவல் வந்துள்ளது. இந்த சம்பவம் அறிந்த விஜய் ரசிகர் இயக்கத்தில் இருப்பவர்கள் பாலமுருகனின் வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர்.

தவறான உறவு, கணவனைக் கொல்ல சதி; கடைசியில் இப்படி மாட்டிக்கிட்ட மனைவி!

''நம்மை எல்லாருக்கும் பிடித்து விட்டால் அதில் சுவாரசியம் இருக்காது. நம்மை சீண்டுபவர்களை அப்படியே கவனிக்காமல் சென்று விடவேண்டும்'' என்று கூறும் விஜயின் அறிவுரைகளை கேக்கமால் ஒரு ரசிகர் தற்கொலை செய்துகொள்ளலாமா? இப்படி தற்கொலை செய்துகொண்டாயே நண்பா என்று ட்விட்டர் வாசிகள் பாலமுருகனின் மரணம் தொடர்பாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி