ஆப்நகரம்

விஜய் ரசிகரை கொலை செய்த ரஜினி ரசிகர்!

மரக்காணத்தில் குடி போதையில், விஜய் ரசிகரை கொலை செய்த, ரஜினி ரசிகரை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 24 Apr 2020, 11:15 am
தங்களுக்கு விருப்பமான நடிகர்கள் படங்களை திரையரங்குக்கு சென்று பார்ப்பதோடு, அவர்களது பெயர்களைக் கூறி சமூக வலைதளங்களில் பிற நடிகர்களின் ரசிகர்களோடு மல்லுக்கு நிற்பது தமிழகத்தைப் பொறுத்தவரை வழக்கமானதுதான்.
Samayam Tamil விஜய் ரசிகரை கொலை செய்த ரஜினி ரசிகர்


தற்போது இந்த ரசிகர்கள் மோதல் மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனாவால் மொத்த உலகமே வீடுகளுக்குள் முடங்கிக் கொண்டு இதிலிருந்து தப்பிக்க என்ன வழி என விழி பிதுங்கி நிற்கிறது. ஆனால் சிலரோ திரைப்பட நடிகர்களின் பெயரில் கைகலப்பில் இறங்கி, கொலை செய்யும் அளவுக்கு இறங்கியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தைச் சேர்ந்தவர் யுவராஜ், (22) இவர் விஜய் ரசிகர். அதே பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்பாபு, (22) இவர் ரஜினி ரசிகர். இருவரும் நண்பர்கள். கூலித் தொழிலாளர்கள். ஊரடங்கு உத்தரவால், இருவரும் வேலைக்குச் செல்ல முடியாததால் வீட்டிலேயே இருந்தனர். நேற்று மதியம், 1:30 மணிக்கு இருவரும், வீட்டின் அருகே மது குடித்துள்ளனர்.

மதுரையில் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி!

போதை தலைக்கேறியதும், 'கொரோனா நிவாரண நிதியாக, அரசுக்கு அதிக பணம் கொடுத்தது, ரஜினியா, விஜயா...' என, அவர்களுக்குள் விவாதம் நடந்தது. ஒரு கட்டத்தில், வாக்குவாதம் முற்றி, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில், யுவராஜை, தினேஷ்பாபு நெட்டித் தள்ளியதில், சாலையில் கிடந்த கல் மீது விழுந்து, தலையில் படுகாயமடைந்து, யுவராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து மரக்காணம் போலீசார், தினேஷ்பாபுவை கைது செய்தனர்.

இந்த சம்பவம் மரக்காணம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி