ஆப்நகரம்

புக் எடுக்க வந்த மாணவி.. தலைமை ஆசிரியர் செய்த காரியம்.. அடி வெளுத்த ஊர் மக்கள்..!

திண்டிவனம் அருகே அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை ஆசிரியரை தாக்கிய ஊர் மக்கள்

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 22 Apr 2023, 4:56 pm
எப்போதும் இல்லாத அளவில் கடந்த சில ஆண்டுகளாக பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இன்றைய காலத்தில் வெள்ளந்தியாக வளரும் சிறுமிகளை கயவர்கள் காதல் வலையில் வீழ்த்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். வெள்ளந்தி என்று சொல்வதை விட ஒருவரது அணுகுமுறையை சுதாரித்துக்கொள்ளாமல் சகஜமாக இருக்கும் மாணவிகளுக்கும், சிறுமிகளுக்கும் பாலியல் அத்துமீறல்கள் அதிகமாக அரங்கேறுகின்றன.
Samayam Tamil head master


அதே சமயம், பிள்ளைகளுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள், பேராசிரியர்கள் உட்பட பெற்றோர் வரை பெண் பிள்ளைகளை பாலியல் தொல்லைக்காளாக்குவது கொடுமையின் உச்சம். இந்த நிலையில், திண்டிவனம் அருகே பள்ளி மாணவிக்கு தலைமை ஆசிரியரே தனி அறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த விட்டலாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக் கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சகலகலாதரன் (59) என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார்.


என்ன நடந்தது?

ஒரு வாரத்துக்கு முன்பு இந்த பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வருகை பதிவேடு எடுப்பதற்காக தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றுள்ளார். அப்போது, சகலகலாதரன் இந்த மாணவியை கிட்ட அழைத்து சாக்லேட் நீட்டியுள்ளார். அதை வாங்கியபோது சகலகலாதரன் மாணவியை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அங்கிருந்து அழுதுகொண்டே வெளியே வந்துள்ளார்.

அப்போது இதுகுறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்த மாணவி வீட்டுக்கு போனதும் பெற்றோரிடம் அழுதபடி கூறியுள்ளார். இதை கேட்டு பதறிப்போன பெற்றோர் ஊர் மக்களுடன் சேர்ந்து வந்து பள்ளியை முற்றுகையிட்டனர். இருட்டிய நேரத்தில் பள்ளியை 300 க்கும் மேற்பட்டோர் சூழந்துகொண்டதால் அந்த பகுதி பரபரப்பானது. தகவல் அறிந்து வந்த போலீசார் தலைமை ஆசிரியரை பாதுகாப்பாக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றபோது சுற்று இருந்த கிராம மக்கள் சரமாரியாக அடித்து வெளுத்தனர். பின்னர் ஒரு வழியாக அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்ற ரோஷணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி