ஆப்நகரம்

பெட்ரோல் ஊற்றி எரிப்பு: விழுப்புரம் மாணவி மரணம்!

விழுப்புரம் மாணவி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Samayam Tamil 11 May 2020, 11:35 am
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை ஊரைச் சேர்ந்த ஜெயபாலுக்கும் முருகன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
Samayam Tamil விழுப்புரம் மாணவி மரணம்


ஜெயபாலின் தம்பி ஏற்கெனவே வெட்டிக்கொல்லப்பட்டதால் அது தொடர்பான வழக்கு நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் முருகன் மற்றொரு வெறிச் செயலில் ஈடுபட்டுள்ளார்.

ஜெயபாலின் மகள் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். வீட்டில் மாணவி தனியாக இருந்தபோது முருகன் மற்றும் அவரது உறவினர் யாசகம் ஆகியோர் உள்ளே நுழைந்து மாணவியின் கை கால்களை கட்டிப்போட்டு தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.

விழுப்புரத்தில் நடந்த கொடூரம்: மாணவி எரிப்பு வழக்கில் இருவர் கைது!

தீ புகையும், மாணவியின் அலறல் சத்தமும் கேக்க அக்கம் பக்கத்தினர் வந்து பார்க்கையில் அவர் உயிருக்கு போராடி வந்துள்ளார். உறவினர்கள் அவரை உடனே மீட்டு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காவல் துறையினர் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் அருண்குமாரிடம் பாதிக்கப்பட்ட மாணவி தன்னை கட்டிப்போட்டு முருகன் மற்றும் அவரது உறவினர் யாசகம் ஆகியோர் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதாக வாக்குமூலம் அளித்தார். அதைத் தொடர்ந்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

95 சதவீதம் தீக் காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த மாணவி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அடுத்த செய்தி