ஆப்நகரம்

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: 5 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மர்ம மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் 5 பேரின் நீதிமன்ற காவலை வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை நீட்டித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 12 Aug 2022, 3:59 pm
கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கபட்டுள்ளனர். இவ்வழக்கு விசாரனை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருவதால் 5 பேரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை செய்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Samayam Tamil kallakurichi student case


இந்நிலையில், ஐந்து பேரையும் ஜாமீனில் விடுவிக்ககோரி விழுப்புரம் நீதிமன்றத்தில் பள்ளி நிர்வாகத்தினர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 5 பேரின் ஜாமின் மனுவை விசாரித்த மகளிளா நீதிமன்ற நீதிபதி சாந்தி சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்யும் கிரைம் நம்பரை கொண்டும், ஜிப்மர் மருத்துவ குழுவினர் இறந்த மாணவியின் இரண்டு உடற்கூறு ஆய்வு அறிக்கையை ஆய்வு செய்து ஆய்வு செய்து தாக்கல் செய்யும் அறிக்கையை கொண்டு தான் முடிவு செய்யப்படுமென முடியும் என கூறி ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரனையை 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் 5 பேருக்கும் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால் விழுப்புரம் மாவட்ட தலைமை நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா 5 பேருக்கும் கூடுதலாக 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க இன்று உத்தரவிட்டார். பள்ளி நிர்வாகத்தினர் 5 பேரின்ஜாமீன் வழக்கு வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

அடுத்த செய்தி