ஆப்நகரம்

விழுப்புரத்தில் நடந்த கொடூரம்: மாணவி எரிப்பு வழக்கில் இருவர் கைது!

விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 11 May 2020, 10:28 am
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை ஊரைச் சேர்ந்த ஜெயபால் என்பவரது மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
Samayam Tamil விழுப்புரத்தில் நடந்த கொடூரம்


இவரது வீட்டிலிருந்து தீப்புகையும் அலறல் சத்தம் வந்ததைத் தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் சென்றுபார்த்தபோது சிறுமி உடல் முழுவதும் தீக்காயங்களுடன் துடித்தபடி இருந்துள்ளார். அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காவல் துறையினர் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பாதிக்கப்பட்ட மாணவி தன்னை கட்டிப்போட்டு முருகன் மற்றும் அவரது உறவினர் யாசகம் ஆகியோர் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதாக விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் அருண்குமாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

நெல்லையில் சித்த மருத்துவர் அடித்துக் கொலை; போலீசார் தீவிர விசாரணை

அவரது உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மாணவியின் தந்தைக்கும், முருகன் தரப்புக்கும் ஏற்கனவே இருந்த முன்பகையே இந்த சம்பவத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. மாணவியின் சித்தப்பா, ஏற்கனவே வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில், அது தொடர்பான வழக்கு நடந்துவருகிறது.

வாட்ஸ்-அப்பில் சர்ச்சை விளம்பரம்; அதுக்குனு இப்படி பண்ணலாமா? - சென்னை பேக்கரியில் பரபரப்பு!

இந்த வழக்கு தொடர்பாக இரு தரப்புக்கும் மோதல் அடிக்கடி நடந்துவந்த நிலையில் மாணவி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளார். 95 சதவீத தீக்காயங்களுடன் மாணவி சிகிச்சை பெற்று வருகிறார்.

அடுத்த செய்தி