ஆப்நகரம்

வட மாநில பயணிகளை இழுத்து போட்டு உதைத்தவர் கைது...! துப்பு கொடுத்தவருக்கு சன்மானம்

ஓடும் ரயிலில் வட மாநில இளைஞர்களை தகாத வார்த்தையால் பேசி தாக்கிய விழுப்புரத்தைச் சேர்ந்த நபரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 21 Feb 2023, 6:23 pm
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓடும் ரயிலில் இருக்கைகளை ஆக்கிரமித்த வட மாநிலத்தவர்களை உள்ளூர் பயணி சரமாரியாக அடித்து உதைக்கும் காட்சி வைரலானது. அந்த வீடியோவில், எங்க ஊருக்குள்ளேயே வந்து எங்களையே அடிப்பீங்களா என்று சொல்லி அந்த நபர் சம்பந்தமே இல்லாத வட மாநில பயணிகள் மீது தாக்குதல் நடத்தினார்.
Samayam Tamil morth indian attacked


அந்த கூட்டத்தில் பார்த்தவரையெல்லாம் அந்த நபர் இழுத்து போட்டு அடித்ததும் பயத்துடன் காணப்பட்ட வட மாநில பயணிகளின் நிலை வருத்தமாக இருந்தது. அந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவிய நிலையில் ரயில்வே காவல்துறையும் அந்த நபரை குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்தது. இந்தநிலையில், காவல்துறையால் தேடப்பட்டு வந்த அந்த நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுமக்களில் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம் கானை கிராமத்தைச் சேர்ந்த மகிமைதாஸ் (38) என்பவரை சென்ட்ரல் ரயில்வே காவல் துறையினர் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கூலித் தொழிலாளி என்பதும், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது.

அந்தரங்கத்தை பகிர்ந்த பெண் அதிகாரிகள்... பொம்மைக்கு ரைடு விட்ட டெல்லி..!

இவர் சமீபத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்லும்போது, விருத்தாசலம் அருகே வடமாநில இளைஞர்களை தகாத வார்த்தையால் பேசி தாக்கி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் மகிமைதாஸ் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதேநேரம் மகிமைதாஸ் குறித்து துப்பு கொடுத்த நபருக்கு தக்க சன்மானம் தர இருப்பதாகவும் தமிழ்நாடு ரயில்வே காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல இடங்களில் பொதுமக்கள் மீது அத்து மீறும் வட மாநிலத்தவர்களை பிடிப்பதிலும் காவல்துறை இதே வேகத்தை காட்ட வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி