ஆப்நகரம்

விழுப்புரம் கூட்டு பலாத்காரம்... உண்மையா? பொய்யா.? மாணவி வாக்குமூலம்

விக்கிரவாண்டி பலாத்கார சம்பவம் நீதிபதி முன்னிலையில் பாதிக்கப்பட்ட மாணவி ரகசிய வாக்குமூலம் அளித்தார்.

Samayam Tamil 11 Mar 2023, 12:52 pm
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனும், அய்யங்கோயில்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியும், சிந்தாமணியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
Samayam Tamil villupuram crime


இந்நிலையில் சிறுவனும், சிறுமியும் பிப்ரவரி 25 ஆம் தேதி இரவு செங்கமேடு ஏரிக்கரைக்கு சென்று பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று இருவரையும் தாக்கி அவர்களிடம் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துள்ளனர், மேலும் சிறுவனை கத்தியால் குத்திவிட்டு 17 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து விட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் விழுப்புரம் பகுதியை புரட்டிப்போட்டது, அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 3 மர்ம நபர்களை பிடிக்க 15 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருவதோடு சந்தேகத்தின்பேரில் 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி முடித்த நிலையில் இதுவரையிலும் இச்சம்பவத்தில் எந்தவித துப்பும் துலங்கவில்லை.

அம்பலமான கணவன் ரகசியம்... 2 வாரத்தில் புதுப்பெண் தற்கொலை..! கரூரில் பகீர் சம்பவம்

இதனால் அப்பள்ளி மாணவர், மாணவி ஆகியோர், போலீசாரிடம் அளித்த புகார்கள் உண்மைதானா அல்லது தங்கள் மீதுள்ள குற்றங்களை மறைப்பதற்காக பொய்யான தகவல் ஏதேனும் கூறியுள்ளனரா? என்று காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதை கண்டறிவதற்காக காவல் துறையினரின் பரிந்துரைப்படி விழுப்புரம் மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) ராதிகா முன்னிலையில் அம்மாணவி ரகசிய வாக்குமூலம் அளித்தார். அந்த வாக்குமூலத்தை நீதிபதி பதிவு செய்தார். இந்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை நீதிமன்ற அனுமதியுடன் பெற்று அதன் அடிப்படையில் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அடுத்த செய்தி