ஆப்நகரம்

டான்ஸுக்கு ஊ ஊ... சேலம் ரசிகர்களால் கடுப்பான ஆண்ட்ரியா..!

நடனமாட சொல்லி வற்புறுத்திய ரசிகர்கர்களால் ஆத்திரமடைந்த நடிகை ஆண்ட்ரியா பாடல் மட்டும் பாட முடியும் என்று கூறிவிட்டு சென்றதால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Samayam Tamil 9 Apr 2022, 12:54 pm
சேலம் மாவட்டம் மல்லூர் வேங்காம்பட்டி கோயில் திருவிழாவின் கடைசி நாளில் திரை இசை கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரபல தமிழ் சினிமா நடிகையும் பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியா கலந்து கொள்வதாக பல்வேறு விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில், நடன நிகழ்ச்சியை காண்பதற்கு கூடிய கூட்டத்தை விட ஆண்ட்ரியாவை காண்பதற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்து காத்திருந்தனர்.
Samayam Tamil andrea jeremiah


அப்போது வெகு நேரம் காத்திருந்த ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஆண்ட்ரியா வந்தார் அவரை காண அவரின் காரை சுற்றி நின்று கொண்ட ரசிகர்களால் ஆண்ட்ரியா காரை விட்டு இறங்க முடியாமல் தவித்தார். அப்போது, அங்கிருந்த காவலர்கள் ரசிகர்களை லேசான தடியடி நடத்தி கலைய செய்தபின்பு ஆண்ட்ரியா காரை விட்டு இறங்கி வந்தார்.

பின்பு மேடைக்கு வந்த ஆண்ட்ரியாவை ரசிகர்கள் ஆரவாரம் பொங்க விசிலடித்து நடனமாடி வரவேற்றனர் அதன் பிறகு அவர் பாடிய பிரபல பாடலான 'ஓ சொல்றியா மாமா' பாடலைப் பாடியது ரசிகர்களை கிறங்க வைத்தது. பாடலை பாடி முடித்தவுடன் நடனமாட வேண்டும் என்று ரசிகர்கள் கத்திய நிலையில் கடுப்பான ஆண்ட்ரியா கோவத்துடன் நின்றார். பின்னர் அவரை சக திரைப்படத்துறையினர் சமாதானம் செய்து மீண்டும் இன்னொரு பாடலைப் பாடிவிடுங்கள் என அறிவுறுத்தினர். அதை அடுத்து, 'இதுவரை இல்லாத உணர்விது' என்ற பாடலை பாடினார்.

மாணவர்களுடன் கட்டாய 'க்ரூப் செக்ஸ்'... மதுரை டீச்சர் கைதும் அதிர்ச்சி பின்னணியும்

அந்த பாடலால் ரசிகர்களுக்கு ஆரவாரம் அளவுக்கு அதிகமானதால் டிஎஸ்பி தலைமையிலான காவல்துறையினர் ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தினர். மேலும், இப்படியே நீங்கள் நடந்துகொண்டால் நிகழ்ச்சியை நிறுத்தி விடுவேன் என்று காவல்துறையினர் எச்சரித்த நிலையில் ரசிகர்களின் ஆரவாரம் அமைதியானது. இதனையடுத்து அப்பகுதியில் இருந்து நடிகை ஆண்ட்ரியா கிளம்பினார். ஆண்ட்ரியா இருந்தது முதல் கடுப்பாகி கடைசி பாடலை பாடி சென்றது வரை அங்கிருந்த ரசிகர்கள் நடந்துகொண்ட விதம் ஆண்ட்ரியாவை, எதுக்குடா இந்த நிகழ்ச்சிக்கு சம்மதித்தோம் என்று நினைக்கும் அளவுக்கு கடுப்பை ஏற்றிவிட்டது.

அடுத்த செய்தி