ஆப்நகரம்

போதை தலைக்கேறி இளம்பெண் செய்த சிலுமிஷம்... வைரலாகும் வீடியோக்கள்

மும்பையில் போதையில் இருந்த பெண் ஒருவர், காவல்துறையினர் மற்றும் சாலையில் செல்பவர்களை அழைத்து ரகளையில் ஈடுபடும் வீடியோ சமூக ஊடகங்களில் தீயாக பரவி வருகிறது.

Samayam Tamil 21 Jun 2022, 6:43 pm
மும்பையில் நடந்த இரவு பார்ட்டியில் குடித்துவிட்டு இரவு தாமதமாகத் திரும்பிய பெண்கள் மூன்று பேர் ஓலா காரை புக் செய்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த ஓலா கார் டிரைவர் போதையில் இருந்த மூன்று பெண்களையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.
Samayam Tamil drunk woman video image


ஆனால், புறப்பட்ட வழியிலேயே அந்த மூன்று பெண்களில் ஒருவர் சத்தம் போட்டு கார் ஓட்டுனரிடம் சிலுமிஷத்தில் ஈடுபட்டதோடு, அவரை காரில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.


இந்நிலையில், இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த காரை நிறுத்தி மூன்று பெண்களையும் வெளியே அழைத்து விசாரித்தனர். விசாரணையின்போது வெள்ளை நிற டி ஷர்ட் அணிந்திருந்த பெண் ஒருவர் போலீசாரின் சட்டையை பிடித்து ரகளை செய்தார்.

அங்கு இருந்த ஆண்களிடம் சிகரெட் கேட்டு அடம் பிடித்து ரோட்டில் படுத்து உருண்ட சம்பவம் அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது. இந்த வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி