ஆப்நகரம்

விருதுநகர் கொலை பின்னணி: தனிப்படை அமைத்த போலீஸ்!

பழிக்குப்பழி விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை, காப்பாற்ற வந்த தாயைத் தள்ளி விட்டு கத்தியை வைத்து சரமாரியாக நிர்வாகியை வெட்டி சாய்த்த கும்பல்...

Samayam Tamil 13 Nov 2019, 12:42 pm
விருதுநகர் கொலை வழக்கில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளை காவல்துறையினர் நெருங்கி உள்ளனர். தனிப்படை, அமைத்த காவல்துறையினர் கொலையாளிகளை விரைவில் கைது செய்ய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil 100 (3)


விருதுநகரில் அதிமுக நிர்வாகி சண்முகவேல் ராஜன். வயது 44. ரியல் எஸ்டேட்டை தொழிலாகச் செய்து வருபவர். இவருக்கு சில தினங்களுக்குமுன் மாணவர் அணி அவைத் தலைவராகப் பொறுப்பு வழங்கப்பட்டது. இவர் மனைவி வசந்தி. விருதுநகர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அலுவலக எழுத்தராக பணியாற்றி வருகிறார். சண்முகவேல்-வசந்தி தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டு சண்முகவேல் ராஜன், வீட்டு வாசலுக்கு வருகிறார். அப்போது 2 பைக்களில் வந்த 6 பேர் கையில் வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாள்களை எடுத்து சரமாரியாக வெட்டுகின்றனர்.

பெற்ற மகனை அடித்துக் கொன்ற தந்தை: கண்ணை மறைத்த குடிவெறி!

அப்போது அங்கே வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த சண்முகவேல் ராஜனின் தாயார் அதிர்ந்துபோய், தாக்குதல் நடத்திய கும்பலைக் கலைக்க முயன்றார். அப்போது அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் சண்முகவேலின் தாயைத் தள்ளிவிட்டு, ‘உன்னையும் வெட்டிவிடுவேன்’ என்பது போலச் செய்கை செய்து விரட்ட முயன்றனர்.

தொடர்ந்து கத்தியை வைத்துத் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சண்முகவேல் ராஜன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து விருதுநகர் கிழக்கு காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் சண்முகவேலின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரிசி வாங்கச் சென்ற சிறுமியைக் கடத்தி பாலியல் வன்புணர்வு!

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் அல்லம் பட்டியைச் சேர்ந்த அருண் பாண்டியன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் சண்முகவேல் ராஜனுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. சண்முகவேல் ராஜனுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும் என்பதை அவர் முன்பே அறிந்திருந்ததார் என்றும் கூறப்படுகிறது.

இந்த கொலை சம்பவத்துக்குப் பழி வாங்குவதற்காகவே, சண்முகவேல் ராஜன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். கொலையாளிகளைப் பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி