ஆப்நகரம்

ஹெல்மெட் அணிந்தும், போலீஸ் உயிர் பறிபோன அவலம்!

ஹெல்மெட் கலன்று சென்றது, வேகத்தைக் குறைக்க வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதி...

Samayam Tamil 21 Nov 2019, 12:37 pm
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ஹெல்மெட்டை முறையாக அணியாமல் சென்ற காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழப்பு.
Samayam Tamil iagegln


விருதுநகர் மாவட்டம், எம் ரெட்டிப்பட்டி தனிப்பிரிவு காவலராகப் பணிபுரிபவர் சாம்பிரேம் ஆனந்த். இவர் பணியை முடித்து விட்டு நேற்று இரவு தனது வீட்டுக்குத் பைக்கில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ராமநாதபுரம்: பெண்ணின் வயிற்றில் ஊசி - அரசு மருத்துவர்களின் அலட்சியம்!

முத்துராமலிங்கபுரம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, தீடிரென நாய் ஒன்று சாலையில் குறுக்கே வந்துள்ளது. இதனால், நிலை தடுமாறிப்போன சாம்பிரேம் ஆனந்த வாகனத்தைச் சீராக இயக்க முயன்றுள்ளார். எனினும், சாம்பிரேமின் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இதனால், சாலையில் பைக்குடன் விழுந்த சாம்பிரேம் ஆனந்த் கீழே விழுந்துள்ளார். தொடர்ந்து அங்குச் சாலையில், வாகனங்களின் வேகத்தைக் குறைக்க வைக்கப்பட்டிருந்த தடுப்பின் மீது சாம்பிரேமின் தலை மோதியுள்ளது. இந்த விபத்தால், சாம்பிரேம் பலத்த காயமடைந்துள்ளார்.

மின்சாரம் விபத்து: தாய், தந்தை உயிரிழந்ததுகூட புரியாமல் விழிக்கும் பிள்ளைகள்!

காவலரை மீட்ட அப்பகுதியினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தின்போது சாம்பிரேம் ஹெல்மெட் முறையாக அணியவில்லை எனக் கூறப்படுகிறது. ஹெல்மெட்டில் உள்ள பெல்ட்டை மாட்டாமல் வெறுமன தலையில் அணிந்திருந்தததால் விபத்தின்போது, அது கழன்று சென்றதாகவும், அதனாலே விபத்தின்போது தலையில் காயம் ஏற்பட்டதாகவும், விபத்து நடந்த பகுதியிலிருந்தவர்கள் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி