ஆப்நகரம்

அசாம் இளைஞர் எப்படி சிக்கினார்?- சிவகாசி சிறுமி கொடூர கொலையில் வெளியான அதிர்ச்சி!

மூன்றாம் வகுப்பு படித்த 8 வயது சிறுமியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் அசாம் இளைஞர் எப்படி கைது செய்யப்பட்டார் என்று இங்கே காணலாம்.

Samayam Tamil 24 Jan 2020, 9:58 am
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கொங்கலாபுரத்தை சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த திங்கட்கிழமை அன்று மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
Samayam Tamil Arrest


இந்நிலையில் அடுத்த நாள் காலை அந்த கிராமத்திற்கு அருகே புதர் ஒன்றில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

கொடூர வன்கொடுமை கொலை- 8 வயது சிறுமிக்காக திரண்ட விருதுநகர் மக்கள்!

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார் அசாமைச் சேர்ந்த மோஜம் அலி என்பவரை கைது செய்தனர். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவர் சிவகாசியில் உள்ள துணிப்பை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த நிறுவனத்திற்கு பெயிண்ட் அடிப்பதற்காக சிறுமியின் தந்தை சென்றுள்ளார்.

அப்போது மோஜம் அலி உள்ளிட்ட அசாம் இளைஞர்கள் உடன் சிறுமியின் தந்தைக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் வீட்டுக்கு அசாம் இளைஞர்கள் வந்து சென்றுள்ளார்.

வில்சன் கொலை வழக்கு: சிக்கிய துப்பாக்கி, எம்எல்ஏக்களை கைகாட்டும் பொன்னார்

இந்த சூழலில் தான் சிறுமி காணாமல் போன திங்கட்கிழமை அன்று மோஜம் அலி அரை நாள் விடுப்பில் சென்றுள்ளார். அன்று இரவு முழுவதும் தங்குமிடத்திற்கு வரவில்லை. அடுத்த நாள் காலை தான் வந்துள்ளார்.

இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. நடந்த சம்பவம் பற்றி போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மை வெளிவந்தது. சிறுமி உடல் கிடைத்த இடத்திற்கு மோஜம் அலியை அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்றதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி