ஆப்நகரம்

விருதுநகர்: காதலை ஏற்காத பெண், மனமுடைந்த வாலிபர் தீக்குளிப்பு... வீடியோ.!

இராஜபாளையம் அருகே இளம்பெண் காதலை ஏற்க மறுத்ததால் தீக்குளித்த வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Samayam Tamil 10 Feb 2020, 1:37 pm
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சொக்கநாதன் புத்தூரை சேர்ந்த அருண் என்ற வாலிபர் ஒருதலையாக ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இந்த நிலையில் தனது காதலை அருண் அப்பெண்ணிடம் தெரிவித்தார். ஆனால் பெற்றோர் சொல்பவரைதான் திருமணம் செய்துகொள்வேன் எனக்கூறி அந்த பெண் அருணின் காதலை ஏற்க மறுத்துள்ளார்.
Samayam Tamil காதலை ஏற்க மறுத்ததால் தீக்குளித்த வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது


இதனால் விரக்தி அடைந்த அருண் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார். உடலில் மளமளவென தீ பற்றி எரிந்ததால் கதறி துடித்த அருணை சம்பவ இடத்தில் இருந்தவர்கள் மீட்டு இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். உடலில் 60% காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருண் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து சேத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


ஒரு பெண்ணோ, ஆணோ காதலில் தோல்வியை சந்திக்க நேர்ந்தால், " நீ கொடுத்து வைத்தது அவ்வளவு தான்" எனக் கூறிவிட்டு, கெத்தாக விடைபெறும் தன்னம்பிக்கையை இன்றைய இளம் தலைமுறையினரிடம் பார்க்க முடிவது ஆரோக்யமான விஷயம் தான்.

தற்கொலை எண்ணத்தை கொல்லுங்க... வாழ்க்கையை வெல்லுங்க...

'ஒன்று போனால் இன்னொன்று உள்ளதடா' என சினிமா பாடல்களை பாடினாலும், காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ளும் பலவீனமானவர்கள் இன்றும் இருக்க தான் செய்கிறார்கள். தோல்வியோ, இழப்போ அதை ஏற்றுக்கொண்டு அடுத்த பயணத்தை நோக்கி நகர்வதுதான் உசிதமானது. எந்த முடிவுக்கும் தீர்வு நம்மிடமே உள்ளது. அதி தேடி பயணித்தாலே போதும், தற்கொலை எண்ணம் உங்களை விட்டு விலகி தலைத்தெறிக்க ஓடிவிடும்.

அடுத்த செய்தி