ஆப்நகரம்

விழுப்புரத்தில் மனைவியை ஏமாற்றி திருநங்கையை திருமணம் செய்தவர் கைது!!

விழுப்புரம் அருகே மனைவி குழந்தைகளை பிரிந்து திருநங்கை ஒருவருடன் குடித்தனம் நடத்தி வந்தவர் டிக் டாக் வீடியோவால் கையும் களவுமாக பிடிபட்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் போலீசாரிடம் வசமாக சிக்கினார்.

Samayam Tamil 2 Jul 2019, 5:03 pm
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வழுரெட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயப்பிரதா. இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் பூந்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
Samayam Tamil thirunangai 2


இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் திடீரென கடந்த 2016ல் சுரேஷ் வீட்டை விட்டு வெளியேறினார். கணவனை உறவினர்களுடன் தேடி வந்த ஜெயப்பிரதா இறுதியில் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.

போலீசாரும் தேடி வந்தனர். இந்த நிலையில், மாயமான சுரேஷ் திருநங்கை ஒருவருடன் ஜோடியாக டிக் டாக் வீடியோ பதிவிட்டு வெளியிட்டுள்ளார். இதை ஜெயப்பிரதாவின் உறவினர் ஒருவர் பார்த்துள்ளார். சந்தேகத்தின் பேரில் அந்த டிக்டாக் வீடியோவை ஜெயப்பிரதாவிடம் காண்பித்துள்ளார்.

டிக்டாக் வீடியோவில் இருப்பது சுரேஷ் தான் என்பதை உறுதி செய்த பின்ன்னர், இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ராஜன் மற்றும் உதவி ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோரிடம் ஜெயப்பிரதா புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் விழுப்புரம் திருநங்கை அமைப்பினரிடம் விசாரித்தனர். அப்போது, வீடியோவில் இருப்பது ஓசூரில் இருக்கும் திருநங்கை என்பது தெரிய வந்தது.

தகவலின் பேரில் ஓசூர் சென்ற போலீசார், திருநங்கையை சுரேஷ் திருமணம் செய்து கொண்டு வசிப்பது தெரிய வந்தது. சுரேஷை போலீசார் மீட்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டில் இருந்து வெளியேறி ஓசூர் பகுதியில் உள்ள தனியார் டிராக்டர் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது திருநங்கையுடன் ஏற்பட்ட பழக்கத்தில் அவரை திருமணம் செய்து குடித்தனம் நடத்தியது தெரிய வந்தது.

அடுத்த செய்தி