ஆப்நகரம்

அங்க சீவலு, இங்க சிதறலு... போலீசை கண்டதும் எகிறிய ரவுடிக்கு மாவு கட்டு...

விழுப்புரம் அருகே தலைமறைவாக இருந்த வழிப்பறி கொள்ளையனை போலீஸ் பிடிக்க வந்தபோது நீர்த்தேக்க தொட்டியிலிருந்து கீழே விழுந்து படுகாயமனடைந்தார்.

Samayam Tamil 13 Feb 2020, 3:42 pm
விழுப்புரம் மாவட்டம் குயிலாப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் உதயன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் அமைத்துள்ள மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளிடம் கத்தியை காட்டி மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார். அப்போது சுரேஷ் என்ற வியாபாரி மாமூல் கொடுக்க மறுத்ததால், அவரை உதயன் தாக்கியதோடு வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளார்.
Samayam Tamil விழுப்புரம் அருகே போலீசை கண்டதும் எகிறிய ரவுடிக்கு மாவு கட்டு


இதையடுத்து சுரேஷ் ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் கூறியுள்ளார். சுரேஷின் அடாவடி தனம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியதை அடுத்து விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் படி தலைமைறைவான உதயனை பிடிக்க தனிப்படை போலீசார் களத்தில் இறங்கினர்.

கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை, சித்ரவதை - 3 ஆண்டுகள் தாங்க முடியாத கொடூரம்!

இதையடுத்து உதயன் மாட்டுக்காரன்சாவடி அம்மாபூங்கா அருகே இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உதயனின் இருசக்கர வாகனம் அங்கிருந்த நீர்த்தேக்க தொட்டிக்கு அருகாமையில் இருந்ததை கண்டனர். பின்னர் உதயன் அந்த தொட்டியின் மேலே இருந்ததையும் உறுதி செய்தனர். அப்போது போலீசார் உதயனை பிடிக்க தொட்டியின் ஏணியில் ஏற முயற்சி செய்தபோது அவர் 25 அடியிலிருந்து கீழே விழுந்தார்.

இதனால் அவரது இடது கால் முறிந்தது. அவரை மீட்டு கைது செய்த போலீசார் உதயனின் காலுக்கு மாவு கட்டு போட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அடுத்த செய்தி