ஆப்நகரம்

அலுவலக உபயோக வாகனத்தில் சுழல் விளக்குடன் சுற்றும் வக்பு வாரிய தலைவர்?

வக்பு வாரிய தலைவருக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்க காவத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 6 Aug 2022, 6:37 pm
அலுவலக உபயோக வாகனத்தில் தேசிய கொடி, சுழல் விளக்குடன் வலம் வருவதாக தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருக்கு எதிரான புகார் குறித்து விசாரித்து, முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை வடக்கு கடற்கரை போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil அப்துல் ரகுமான்


வக்பு வாரிய பாதுகாப்புக்குழு அறக்கட்டளை தலைவரான மதுரை கட்ராபாளையத்தைச் சேர்ந்த எம்.அஜ்மல்கான் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அப்துல் ரஹ்மான், தனது அலுவலக உபயோகத்துக்கான காரில் தேசியக்கொடி மற்றும் ஊதா நிற சுழல் விளக்குடன் வலம் வந்து கொண்டிருப்பதாக கூறி, உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், வக்பு வாரிய தலைவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய, அரசின் முன் அனுமதி பெற வேண்டும் எனக்கூறி மனுவை திருப்பி அனுப்பி விட்டதால், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

மீரா மிதுனுக்கு ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் - ரசிகர்கள் அதிர்ச்சி..!

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி, இதுதொடர்பாக சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி, மனுதாரரின் புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி