ஆப்நகரம்

உயிரை பறிக்கும் 'மாஞ்சா' - திருவள்ளூர் அருகே போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மிகவும் ஆபத்தான கயிறாக விளங்கும் மாஞ்சாவை தயாரித்து, பதுக்கி வைத்திருந்த இடத்தை போலீசார் கண்டறிந்தனர்.

Samayam Tamil 5 Nov 2019, 11:57 am
சவ்வரிசி கலவையில் கண்ணாடி துகள்களை கலந்து பட்டத்தின் நூலில் தோய்த்து மாஞ்சா நூல் தயாரிக்கப்படுகிறது. இந்த நூல் எதிராளிகள் விடும் பட்டத்தின் நூலை அறுக்க உதவுகிறது.
Samayam Tamil Manja Thread


தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாஞ்சா நூல் பட்டம் விடுகின்றனர். உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது, இந்த பட்டங்கள் திடீரென்று அறுந்து விடுகின்றன.

தனது குடும்ப பெண்களையே ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக் பதிவு - வசமாக சிக்கிய இளைஞர்!

இது சாலையில் நடந்து செல்வோர், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கழுத்தை அறுத்து உயிரை பறித்து விடுகிறது. இதன் காரணமாக மாஞ்சா நூல் பயன்பாட்டிற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இருப்பினும் தடையை மீறி மாஞ்சா நூல் காற்றாடிகள் பறந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் சென்னை கொருக்குபேட்டையில் இருசக்கர வாகனத்தில் தனது பெற்றோருடன் சென்று கொண்டிருந்த 3 வயது குழந்தை, மாஞ்சா நூல் கயிற்றில் கழுத்து அறுபட்டு உயிரிழந்தது.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மாஞ்சா நூல், காற்றாடி தயாரிக்கும் இடங்களை கண்டுபிடிக்க போலீசார் 12 தனிப்படைகளை அமைத்தனர்.

படித்தது பிளஸ்2... தொழில் டாக்டர்... சிக்கிய பெண்...

இவர்கள் மேற்கொண்ட சோதனையின் போது, மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் மர்ம நபர்கள் சிலர் தப்பி சென்றனர். அவர்கள் இருந்த வீட்டில் 1,300க்கும் மேற்பட்ட காற்றாடிகள், மாஞ்சா நூல், ராட்டினம், மாஞ்சா நூல் தயாரிக்கும் பாட்டில் துகள்கள் கண்டறியப்பட்டன.

மொத்தம் 3 மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடியவர்கள் யார் என்றும், அவர்கள் எங்கெல்லாம் விற்பனை செய்து வந்துள்ளனர் என்றும் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.

வீரப்பனை சுட்டதற்காக கிடைத்த மெடலை திருடிட்டாங்க... சத்தியமங்கலம் எஸ்.ஐ. சோகம்...

அடுத்த செய்தி