ஆப்நகரம்

இஸ்லாமியர்களிடம் நகைகளை மோசடி செய்ததாக ரூபி நகைக்கடை மீது புகார்

நகைகளை அடகு வைத்தால் வட்டியில்லாத கடன் தருவதாக கூறி இஸ்லாமியர்களிடம் நகைகளை மோசடி செய்ததாக தியாகராயர் நகரில் இயங்கி வந்த ரூபி நகைக்கடை மீது புகார் எழுந்துள்ளது. இதை நம்பி 200க்கும் மேற்பட்டோர் ரூபி நகைக்கடையில் ஏராளமானோர் தங்களது நகைகளை அடகு வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 5 May 2019, 5:09 pm
நகைகளை அடகு வைத்தால் வட்டியில்லாத கடன் தருவதாக கூறி இஸ்லாமியர்களிடம் நகைகளை மோசடி செய்ததாக தியாகராயர் நகரில் இயங்கி வந்த ரூபி நகைக்கடை மீது புகார் எழுந்துள்ளது.
Samayam Tamil gold


சென்னை தியாகராய நகரில் ரூபி என்ற நகைக்கடை இயங்கி வருகிறது. இங்கு அணீஸ் என்பவர், நகைகளை அடகுவைத்தால் இஸ்லாமியர்களுக்கு வட்டியில்லாத கடன் தருவதாக நகைகளை அடகு வைக்க வைத்துள்ளார்.

இதை நம்பி 200க்கும் மேற்பட்டோர் ரூபி நகைக்கடையில் ஏராளமானோர் தங்களது நகைகளை அடகு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென ரூபி நகை அடகுக்கடை மூடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதபற்றி விசாரித்ததில் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார்கள்.

இதனால் 200க்கும் மேற்பட்டோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தங்கள் நகைகளை ஏமாற்றிவிட்டு தப்பிய அணீஸ் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நகைகளை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் இன்று மாலை பரபரப்பாக காணப்பட்டது.

அடுத்த செய்தி