ஆப்நகரம்

உயிரைக் குடித்த வாட்ஸப் மெசேஜ்: நடிகை கணவர் மரணத்தின் பகீர் பின்னணி!

நடிகை ராககவியின் கணவரும் ஒளிப்பதிவாளருமான சசிக்குமாரின் தற்கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 25 Oct 2019, 9:32 am
ராஜா சின்ன ரோஜா உள்ளிட்ட படங்களிலும் திருமதி செல்வம் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தவர் ராகவி. இவர் தனது கணவர் சசிகுமாருடன் வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டையில் வசித்து வந்தார். சசிகுமார் தனியார் ஸ்டூடியோ ஒன்றில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிவந்தார். இவரது திடீர் மரணம் திரைத்துரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Untitled collage (10)


குடும்பங்களும் குழந்தைகளும் இருக்க,.. ரூம் எடுத்து தற்கொலை செய்துகொண்ட காதலர்கள்..!

சசிகுமார் தான் பணியாற்றும் ஸ்டூடியோவில் வாடகைக்கு கேமரா ஒன்றை சில வாரங்களுக்கு முன்னால் பெற்றுள்ளார். ஆனால் அந்த கேமரா திருடுபோன நிலையில் ஸ்டூடியோவில் கேமராவை ஒப்படைக்கவில்லை. சசிகுமார் கேமராவை வைத்துக்கொண்டு திருடுபோனதாக பொய்சொல்வதாக மகேஷ் என்பவர் கூறியுள்ளார். மேலும் ஒளிப்பதிவாளர்களுக்கான வாட்ஸப் குரூப் ஒன்றில் ‘சசிகுமார் ஒரு கேமரா திருடன்’ என பதிவிட்டுள்ளார். இதனால் சசிகுமார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

''கஞ்சா பிடிக்காதீங்கப்பா'', என கூறிய தொழிலதிபர் கொலை..! 4 வாலிபர்கள் தப்பியோட்டம்..

கேமராவை ஒப்படைக்காத நிலையில் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் சசிகுமாருக்கு எதிராக புகாரும் அளிக்கப்பட்டது. போலீஸாரும் சசிகுமாரிடம் விசாரணை நடத்திய நிலையில் மிகவும் அவமானகரமாக உணர்ந்த சசிகுமார் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி வீட்டை விட்டு கிளம்பியுள்ளார். அதன்பின் அவர் வீட்டிற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பெங்களூர் சென்ற சசிகுமார் அங்கிருந்து சிலதினங்களுக்கு முன் வந்துள்ளார். பின் அங்கிருந்து ஜோலார் பேட்டைக்கு வந்துள்ளார். அங்கு ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது சட்டைப் பையில் இருந்த அடையாள அட்டை மூலம் சசிகுமார் என்பது தெரியவந்தது.

சிறைக்கு செல்வாரா கல்கி சாமியார்? நெருக்கும் அமலாக்கத் துறை!

சமூகவலைதளங்களில் பதிவிடும் பதிவுகள் ஒரே நேரத்தில் பலரால் பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது. அந்த மாதிரியான தளத்தில் பிறர் மனதைப் பாதிக்கும் தனிப்பட்ட கருத்துக்களை பதிவிடும்போது இது போன்ற உயிரிழப்புகள் வரை நிகழ்ந்துவிடுகின்றன. மிகச் சாதாரண விஷயம் ஒன்றிற்காக ராகவி தனது கணவரை இழந்து மகளுடன் துயருற்று வருகிறாள்.

அடுத்த செய்தி