ஆப்நகரம்

மாவு கட்டு போட்டாச்சு; அப்புறம் என்ன? கெஞ்சும் ரவுடி கணேசனின் வீடியோவை பாருங்க!

காவல் ஆய்வாளர்கள் மீது தாக்குதல் நடத்தி கைதான ரவுடி கணேசன் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.

Samayam Tamil 12 Jan 2020, 10:43 am
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பேருந்து நிறுத்தம் அருகே பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சிகரெட் கேட்ட விவகாரத்தில் இரண்டு பேருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil Arrest


அப்போது அப்பகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணியில் உச்சிபுளி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ஜெயபாண்டி, நந்தகுமார் ஆகியோர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்கள் தகராறில் ஈடுபட்டவர்களை பிடித்து விசாரிக்க முயன்றனர்.

10ஆம் வகுப்பு மாணவிக்கு குறி; குலைநடுங்க வைக்கும் வாக்குமூலம் - சிக்கிய அரசு ஆசிரியர்கள்!

ஆனால் போதையில் இருந்த இரு நபர்களும் உதவி ஆய்வாளர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் போலீசாரின் இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் போலீசாரின் தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களை காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இன்னும் 10 நாட்கள் தான்; அதுக்குள்ள 400 சவரன் நகை போச்சே; சோகத்தில் பிரபல பாஜக பிரமுகர்!

மேலும் நடந்த சம்பவம் குறித்தும் கேட்டறிந்தனர். இதன் தொடர்ச்சியாக போலீசாரை தாக்கியவர்களை பிடிக்க தனிப்படை அமைத்தனர். குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுத்த ஐந்தாயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்தனர்.

இந்நிலையில் உச்சிபுளி அருகே வெள்ளமாசிவலசை பகுதியை சேர்ந்த முக்கிய குற்றவாளி கணேசனை(25) போலீசார் கைது செய்தனர். அவர் காவல் நிலையத்தின் பாத்ரூமில் வழுக்கி விழுந்து மாவு கட்டு போட்டுள்ளார்.

கயிற்றால் கட்டி கிணற்றில் மூழ்கடித்து?- சிறுவனுக்கு நேர்ந்த பயங்கரம்- பெற்றோர் அதிர்ச்சி!

இந்த சூழலில் கணேசன் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், “பொதுமக்களை பாதுகாத்து வரும் போலீசாரிடம் நண்பனாக பழகி மரியாதை கொடுங்கள்.

நான் மதுபோதையில் உதவி ஆய்வாளர்களை தாக்கிவிட்டேன். என்னைப் போல யாரும் இது மாதிரி சமூகவிரோத செயலில் ஈடுபட வேண்டாம்” என்று வலியுறுத்தி உள்ளார்.

அடுத்த செய்தி