வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, அரசு வழங்கிய வீட்டு மனை பட்டா இடத்தில் வீடு கட்ட சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில், கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி, சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏழைகளை தேர்ந்தெடுத்து, சுமார் 94 பயனாளிகளுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் தலைமையில் வருவாய்த்துறையினர் வீட்டுமனை பட்டா வழங்கினர்.
இதில் வாணியம்பாடி கோணாமேடு பரமேஸ்வர நகர் பகுதியை சேர்ந்த சவுரி தாஸ் மற்றும் உதயேந்திரம் பகுதியை சேர்ந்த அஜிஸ் அஹமத் ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் வீடு கட்ட, இடத்தை அளவீடு செய்ய கொடுக்கும்படி வருவாய் ஆய்வாளர் பிரகாசமிடம் கேடுக்கொண்டனர். அதன் பேரில் அவர் நேரில் சென்று இடத்தை அளவு செய்து பின்னர் அலுவலகத்திற்கு திரும்பி உள்ளார்.
இதையடுத்து இருவரும் வீடு கட்டும் இடத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது, அங்கு வந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த சிலர் இவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் இருவரையும் ஆட்டோவில் கடத்தி கொண்டு பேருந்து நிலையம் அருகே வி.எம்.சி.காலோனி பகுதியில் வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சவுரி தாஸ் திருப்பத்தூர் சார் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் செல்போனில் தொடர்பு கொண்டு புகார் அளித்தார். தகவலின் பேரில் சார் ஆட்சியர், வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் உதவியுடன் அவர்களை கடத்தி வைத்திருந்த இடத்திற்கு சென்றுள்ளார். சார் ஆட்சியர் வருவதை அறிந்த கடத்தல்காரர்கள் இருவரையும் விட்டு தலைமறைவானார்கள்.
பின்னர் இருவரையும் சார் ஆட்சியர் பிரியங்கா மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். மேலும் இருவரையும் தாக்கியவர்களை மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் முரளிக்கு உத்தரவிட்டார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி வருவாய் துறையினருக்கு மற்றும் காவல்துறை உத்தரவு பிறப்பித்தார். இச்சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில், கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி, சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏழைகளை தேர்ந்தெடுத்து, சுமார் 94 பயனாளிகளுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் தலைமையில் வருவாய்த்துறையினர் வீட்டுமனை பட்டா வழங்கினர்.
இதில் வாணியம்பாடி கோணாமேடு பரமேஸ்வர நகர் பகுதியை சேர்ந்த சவுரி தாஸ் மற்றும் உதயேந்திரம் பகுதியை சேர்ந்த அஜிஸ் அஹமத் ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் வீடு கட்ட, இடத்தை அளவீடு செய்ய கொடுக்கும்படி வருவாய் ஆய்வாளர் பிரகாசமிடம் கேடுக்கொண்டனர். அதன் பேரில் அவர் நேரில் சென்று இடத்தை அளவு செய்து பின்னர் அலுவலகத்திற்கு திரும்பி உள்ளார்.
இதையடுத்து இருவரும் வீடு கட்டும் இடத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது, அங்கு வந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த சிலர் இவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் இருவரையும் ஆட்டோவில் கடத்தி கொண்டு பேருந்து நிலையம் அருகே வி.எம்.சி.காலோனி பகுதியில் வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சவுரி தாஸ் திருப்பத்தூர் சார் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் செல்போனில் தொடர்பு கொண்டு புகார் அளித்தார். தகவலின் பேரில் சார் ஆட்சியர், வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் உதவியுடன் அவர்களை கடத்தி வைத்திருந்த இடத்திற்கு சென்றுள்ளார். சார் ஆட்சியர் வருவதை அறிந்த கடத்தல்காரர்கள் இருவரையும் விட்டு தலைமறைவானார்கள்.
பின்னர் இருவரையும் சார் ஆட்சியர் பிரியங்கா மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். மேலும் இருவரையும் தாக்கியவர்களை மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் முரளிக்கு உத்தரவிட்டார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி வருவாய் துறையினருக்கு மற்றும் காவல்துறை உத்தரவு பிறப்பித்தார். இச்சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.