ஆப்நகரம்

சென்னையில் யார் ரவுடி என்ற போட்டியில் நடந்த கொடூர சித்திரவதை..!

சென்னை அருகே யார் ரவுடி என்ற போட்டியில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கட்டிவைத்து வெட்டியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 29 Sep 2020, 1:38 pm
சென்னை தண்டையார்பேட்டை வஉசி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மொட்டை மாடியில் இளைஞரொருவர் வெட்டுக் காயங்களுடன் அலறி கொண்டிருந்தார். அவரது கூச்சல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
Samayam Tamil chennai crime


அதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வெட்டுக்காயங்களுடன் துடிதுடித்து கொண்டிருந்த இளைஞரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

வெட்டுக்காயங்களுடன் தினேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் நடத்திய விசாரணையில் வெட்டுப்பட்டவர் தண்டையார் நகரை சேர்ந்த தினேஷ் என்பதும் யார் ரவுடி என்ற சவாலில் ஏற்பட்ட விரோதத்தில் 3 பேர் கொண்ட கும்பல் கட்டிப்போட்டு அவரை அரிவாளால் வெட்டியதாக தெரியவந்தது.

கன்னியாகுமரியில் களைகட்டிய கஞ்சா பிசினஸ்!

இதனையடுத்து, தலைமறைவாக இருந்த திருவொற்றியூரை சேர்ந்த அப்பு என்ற சசிகுமார், தண்டையார்பேட்டையை சேர்ந்த முரளி, கிஷோர் ஆகிய 3 பேரை புதுவண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

மக்களை அச்சுறுத்த யார் ரவுடியாக பெயரெடுத்து வலம் வருவது என்ற போட்டியில், குடி போதையில் கைகளை கட்டி ஒருவரை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி