ஆப்நகரம்

கரூர் மாணவி சாக காரணம் யார்? கதறிய பெற்றோருக்கு மத்தியில் பிரேதம் ஒப்படைப்பு..!

பாலியல் சீண்டலால் சாகும் கடைசி பெண் நானாக தான் இருக்க வேண்டும் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட 12ம் வகுப்பு மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Samayam Tamil 20 Nov 2021, 5:22 pm
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு காலணி பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பியுள்ளார். விட்டில் தனியாக இருந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி தூக்கில் தொங்கியவாறு இருந்ததை பார்த்த பக்கத்துவீட்டு பாட்டி ஒருவர் சிறுமியின் தாய்க்கு தகவல் கொடுத்துள்ளார்.
Samayam Tamil karur student suicide case


அவர் வந்த பிறகு வெங்கமேடு காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது மாணவி எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.


அதில், sexual harresment ஆல சாகுர கடைசி பொண்ணு நானாக தான் இருக்கணும், என்ன யார் இந்த முடிவு எடுக்க வெச்சான்ணு நான் சொல்ல பயமா இருக்கு, இந்த பூமியில் வாழுறதுக்கு ஆசைப்பட்டேன், ஆனா, இப்போ பாதியிலேயே போரேன். இன்னொரு தடவ இந்த உலகத்துல வாழ கிடைச்சா நல்லா இருக்கும். பெரிதாகி நிறைய பேருக்கு உதவி பண்ண ஆசை ஆனா முடியல. ஐ லவ் அம்மா, சித்தப்பா, மணி மாமா, அம்மு உங்க எல்லோரையும் ரொம்ப பிடிக்கும், ஆனா நான் உங்கிட்ட எல்லாம் சொல்லாம போகிறேன் மன்னிச்சுருங்க என்றும், இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக் கூடாது என்றும், சாரி மச்சான் சாரி என குறிப்பிட்டு கையெழுத்திட்டுள்ளார்.

ஆசைக்கு இணங்கினால் மட்டுமே சீட்... திண்டுக்கல் நர்சிங் கல்லூரியில் மாணவிகள் சந்தித்த அவலம்...

இந்த கடிதத்தை ஆதாரமாக கொண்டு வெங்கமேடு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் பாலம்மாள் புரம் மின் மயானத்திற்கு எரியூட்டுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.

அடுத்த செய்தி