ஆப்நகரம்

வண்டலூர் பாஜக நிகழ்ச்சியில் புகுந்த பிரபல ரவுடி யார்? என்னய்யா ஆச்சு தாமரைக்கு...

சென்னையில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் கத்தியுடன் வந்திருந்த ரவுடியின் கூட்டாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 1 Sep 2020, 4:26 pm
சென்னையை அடுத்த வண்டலூரில் பாஜக மாநில தலைவர் எல். முருகனின் தலைமையில் மக்களுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட செயலாளர் பலராமன், கேடி ராகவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டார். பாதுகாப்பிற்கு 30 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
Samayam Tamil nedungundram surya


இந்நிலையில், அந்த நிகழ்ச்சியில் பிரபல ரவுடியும் அவரது சில கூட்டாளிகளும் உள்ளதாக ஓட்டேரி காவல் நிலையத்துக்கு தகவல் வந்துள்ளது. அதனையடுத்து அவர்களை பிடிப்பதற்காக போலீசார் ரகசியமாக நோட்டம் பார்த்துள்ளனர். அதில் ஏற்கெனவே குற்ற வழக்கில் தொடர்புடைய 6 பேரை போலீசார் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

போலீசாருடன் பாஜக தொண்டர்களும் காவல் நிலையம் வரை பின்தொடர்ந்து வந்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிடிபட்ட 6 பேரை விசாரித்ததில் அவர்கள், நெடுங்குன்றம் சூர்யாவின் கூட்டாளிகள் என தெரிய வந்தது. நெடுங்குன்றம் சூர்யா மீது கொலை, கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட 50 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யாவின் தம்பி உதயாவை 3 வருடங்களுக்கு முன்புதான் அவரது பகையாளிகள் பட்டப்பகலில் கண்டிகை ரோட்டில் வெட்டி கொலை செய்தனர். அப்போது, ரவுடி சூர்யா சிறையில் இருந்துகொண்டே, தம்பியை கொலை செய்தவர்களுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததாகவும் தகவல்.

இந்நிலையில், பாஜக மாநில தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கூட்டாளிகளுடன் வந்ததன் காரணத்தை விசாரித்ததில், தாங்கள் பாஜகவில் இணைய வந்ததாகவும், போலீசார் ஆங்காங்கே இருந்ததால் அந்த பக்கம் செல்லாமல், மறைந்தபடி நின்றுகொண்டிருந்ததாகவும் பிடிபட்ட கூட்டாளிகள் தெரிவித்தனர். ஆனால், ரவுடி சூர்யா மட்டும் போலீசார் பிடிக்க முயற்சித்த போது தப்பியுள்ளார்.

முதலிரவில் ஏற்பட்ட சந்தேகம், கணவனின் கொடுமையால் பட்டதாரி பெண் தற்கொலை!

பிடிபட்ட ரவியின் கூட்டாளிகளை விடுவிக்க பாஜகவினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. பாஜகவில் இணையும் சிலருக்கு உடனடியாக பதவிகளும் கொடுப்படுகிறது. அவர்களில் சிலர் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகளும் உள்ளன. அதில் வடசென்னையை சேர்ந்த கல்வெட்டு ரவி, பிபிஜி சங்கர் ஆகியோர்கள் உதாரணம். தற்போது ரவுடி சூர்யாவும் பாஜகவில் இணைய வந்திருப்பது சூர்யாவுக்கான தற்காப்பா அல்லது ரவுடிகளை கொண்டு கட்சிக்கு பலம் சேர்க்கும் முயற்சியா என்ற கேள்விகள் சந்தேகமில்லாமல் எழுகின்றன.

அடுத்த செய்தி