ஆப்நகரம்

தவறான உறவு, கணவனைக் கொல்ல சதி; கடைசியில் இப்படி மாட்டிக்கிட்ட மனைவி!

கூலிப்படையை ஏவி கணவனை கொல்ல முயற்சித்த மனைவி மற்றும் இரண்டு அடியாட்கள் கைது செய்யப்பட்டனர்.

Samayam Tamil 14 Aug 2020, 2:23 pm
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வெட்டூர்ணிமடம் பகுதியிலுள்ள கேசவ திருப்பபுரத்தை சேர்ந்தவர் கணேஷ்(39). இவர் வீடியோகிராபராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி(31). இவர்களுக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கணவனும் மனைவியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென கணேஷ் கட்டிலில் இருந்து விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியதாக மனைவி கூறியுள்ளார். இதையடுத்து உறவினர்கள் உதவியுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு நினைவு திரும்பாமல் இருந்ததால் மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கணேஷ் வீட்டில் உள்ள கட்டிலில் இருந்து கீழே விழுந்ததால் இந்த அளவுக்கு காயம் ஏற்படாது.

அவர் கொடூரமாக தலையில் தாக்கப்பட்டு மண்டை ஓடு சேதமாகி உள்ளதாகவும், அவரது விலா மற்றும் மர்ம உறுப்பு போன்றவற்றில் பலமான அடி விழுந்துள்ளது. மர்ம நபர்கள் வீடுபுகுந்து தாக்கியதால் தான் இந்த காயம் ஏற்பட்டதாக கணேஷின் சகோதரர் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். எனவே அவர் கட்டிலில் இருந்து கீழே விழ வாய்ப்பில்லை. இதன் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

லாரி, கார், டூவிலர் குட்கா கடத்தல்: போலீஸ் பிடித்தது எப்படி?

இதுகுறித்து வடசேரி போலீசார் விசாரணை செய்ததில் காயத்ரிக்கு ஒரு காதலன் இருப்பதாகவும், அவர் மூலம் கூலிப் படைகளை கொண்டு, கணவரை கொல்ல திட்டமிட்டிருந்த சதி தெரியவந்தது. இதன்மூலம் காயத்ரியை கைது செய்த போலீசார் கூலிப்படையை சேர்ந்த இரண்டு பேரைக் கைது செய்தனர். இந்நிலையில் தலைமறைவான காதலனை போலீசார் தேடிவருகின்றனர்.

அடுத்த செய்தி