ஆப்நகரம்

புத்தாண்டுக்கு கணவன் லீவ் எடுக்காததால் மனைவி தற்கொலை..! பிள்ளைகள் அனாதை

புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு கணவன் விடுமுறை எடுக்காததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 3 Jan 2021, 9:15 pm
புதுச்சேரி மாநிலம் திருக்கனூரைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மனைவி ஜெயப்பிரதா. இவருக்கு வயது 30. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் மணிவண்ணன் டிரைவர் வேலை செய்து வருகிறார். மணிவண்ணனுக்கு டிரைவர் வேலையை சரியாக பார்ப்பதிலேயே குடும்பத்தில் நேரத்தை செலவழிக்க முடியாமல் இருந்துள்ளது.
Samayam Tamil file pic


குறிப்பிட்ட பணி நேரம் எதுவும் இன்றி அலுவலகத்தில் கூப்பிடும் நேரமெல்லாம் சென்று விடுவார். இந்த நிலையில், புத்தாண்டு தினத்திலாவது வீட்டில் இருக்குமாறு ஜெயப்பிரதா கூறியுள்ளார். ஆனால், அன்றும் வேலை இருக்கும்.

இருப்பினும் முயற்சி செய்கிறேன் என்று மனைவியிடம் கூறிவிட்டு உறங்க சென்றுள்ளார் மணிவண்ணன். ஆனால், சமாதானமாகாத ஜெயப்பிரதா மன விரக்தியில் அவர் இருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சீரழிக்க வந்தவனை குத்தி கொலை செய்த பெண்..! திருவள்ளூர் காவல் நிலையத்தில் சரண்

சிறிது நேரம் கழித்து மணிவண்ணன் அறைக்குள் சென்றபோது, மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ந்து போனார். உடனே ஜெயப்பிரதாவை தூக்கில் இருந்து இறக்கி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயப்பிரதா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்நிலையில், மணிவண்ணனும், இரண்டு பிள்ளைகளும் கதறி அழுத நிகழ்வு அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி