ஆப்நகரம்

மதிய சாப்பாடை சீக்கிரம் செய்ய சொன்னதால் குழந்தையுடன் தீக்குளித்த பெண்..!

கணவன் திட்டியதால் இளம்பெண் குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 29 Nov 2020, 4:36 pm
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த மேல்முடிமன்னார் கோட்டையைச் சேர்ந்தவர் பொன்முருகன் (27). இவர் அதே பகுதியைச் சேர்ந்த குருதேவி (20) என்ற பெண்ணை கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 4 வயதில் ஆண் குழந்தை ஒன்றும் இருந்துள்ளது. பொன்முருகன் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், குருதேவி குழந்தையை பார்த்துக்கொண்டு வீட்டில் இருந்து வந்தார்.
Samayam Tamil தற்கொலை செய்துகொண்ட குருதேவி


இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று பொன்முருகன் வேலைக்கு சென்றுவிட, குருதேவியின் பெற்றோர் வேறொரு விஷயமாக வெளியில் சென்று விட்டனர். இதையடுத்து, வீட்டில் இருந்த குருதேவி தன் மீதும் குழந்தையின் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ பற்ற வைத்துள்ளார்.

ஆள் இல்லாத நேரத்தில் உடல் முழுவதும் தீ பற்றிய நிலையில் இரு உயிர்களும் அலறி துடித்துள்ளன. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் உடல் முழுவதும் தீயினால் கருகி குருதேவியும், குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.

சென்னை சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக தகவல்..! பாஜக பிரமுகர் கைது விவகாரம்

அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கமுதி போலீசார் விசாரணை செய்தனர். பின்னர் இருவரது உடல்களையும் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்தனர். பின்னர் குருதேவியின் கணவர் பொன்முருகனிடம் விசாரித்ததில், சம்பவம் நடந்த அன்று காலை வேலைக்கு செல்லும்போது மதிய உணவை சீக்கிரம் தயார் செய் என குருதேவியிடம் பொன்முருகன் காட்டமாக கூறிவிட்டு சென்றதாக தெரிய வந்தது.

கணவன் கூறிய அந்த வார்த்தையால் மனமுடைந்த குருதேவி குழந்தையுடன் தற்கொலை கொண்டுள்ளார். இதையடுத்து, தம்பதிக்கு திருமணமாகி ஒரு வருடமே ஆகியுள்ளதால் விசாரணை ஆர்டிஓக்கு மாற்றப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி