ஆப்நகரம்

கணவன் இறந்த அதே மருத்துவமனையில் தூக்கில் தொங்கிய இளம்பெண்..! புதுச்சேரியில் பரபரப்பு

மரக்காணம் அருகே வாகன விபத்தில் கணவன் இறந்த நிலையில் துயரம் தாங்காமல் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 30 Mar 2021, 5:57 pm
விழுப்புரம் அருகே கணவனனின் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் கழிவறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் செயல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil couple


விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தையடுத்த ஏந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் ரமேஷ் இரு தினங்களுக்கு முன்னர் கிளியனூர் பகுதியில் இருந்து இளவபட்டு அருகே இருசக்கரவாகனத்தில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மரத்தில் மோதி விபத்துக்குள்ளானார்.

அப்போது விபத்து குறித்து தகவலறிந்து வந்த கிளியனூர் போலீசார் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ரமேஷ்க்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி ரமேஷ் உயிரிழந்தார். ரமேஷ் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் அவரது மனைவியான சரளாவிடம் தெரிவித்துள்ளனர்.

கிராமிய பாடகி தற்கொலை முடிவு..! அதிர்ச்சியில் ராஜலட்சுமி ரசிகர்கள்...

திருமணமான 4 மாதங்களுக்குள் காதல் கணவர் இறந்த துயரம் தாங்காமல் சரளா ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள கழிவறையில் நேற்றைய இரவு துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்ட நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சரளாவும் உயிரிழந்தார்.

காதல் கணவர் இறந்த துயரம் தாங்காமல் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி