ஆப்நகரம்

வேறொரு பெண்ணை தாலி கட்டி குடும்பம் நடத்திய கணவன்... வீட்டுக்கு வந்த மனைவி அதிர்ச்சி

கணவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்ததை பார்த்த விரக்தியில், தாம்பர போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு பெண் , குழந்தை மற்றும் சகோதரியுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Samayam Tamil 24 Jun 2022, 1:31 pm
தாம்பரம், அகரம்தென் பகுதியை சேர்ந்தவர் செல்வி (31). இவருக்கும், ஊரப்பாக்கம்,ரயில்வே நிலைய சாலை பகுதியை சேர்ந்த மணிவண்ணனும் (37), என்பவருக்கும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. மணிவண்ணன், சிறுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு, 10 வயதில் ஒரு மகன் உள்ளார்.
Samayam Tamil husand wife violence


இந்நிலையில், கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுப்பாடு ஏற்பட்டு, கடந்த இரு ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். அகரம்தென் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில்,செல்வி , மகனுடன் வசித்து வந்தார். இதற்கிடையே செல்வி, சமீபத்தில் தனது கணவர் மணிவண்ணனை பார்க்கச் சென்றார்.

அப்போது அங்கு மணிவண்ணன், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு வாழ்வதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். முதல் மனைவி நான் இருக்கும் போது, நீ எப்படி வேறு பெண்ணை திருமணம் செய்வாய் என கேட்டார். நான் யாருடன் வாழ்ந்தால் உனக்கு என்ன என கேட்டு, மணிவண்ணன் செல்வியை சரமாரியாக தாக்கினார்.

கர்ப்பிணி பெண் கள்ளக்காதலனுடன் ஓட்டம்... போலீஸ் உடந்தை... ஜோடியை தேடும் ஆண், பெண்..!

இது குறித்து செல்வி,கூடுவாஞ்ச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் வேதனையடைந்த செல்வி, தனது மகன், சகோதரி ஆகியோருடன் இன்று காலை சோழிங்கநல்லூரில் உள்ள தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது, அவர் திடீரென, தான் வைத்திருந்த மண்ணெண்ணெயை தனது உடல் மீதும், மகன்,சகோதரி மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதைப் பார்த்த அங்கிருந்த போலீசார், 3 பேர் மீதும் தண்ணீரை ஊற்றி மீட்டனர். ஆனாலும், செல்வி, குழந்தை, சகோதரியுடன் போராட்டம் நடத்தினார். பின்னர், போலீசார் அவரை சமாதானப்படுத்தி, கூடுவாஞ்சேரி காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி