ஆப்நகரம்

திருமணம் முடிந்த 5 மாதத்தில் கணவனை கல்லால் அடித்துக் கொன்ற மனைவி

நாகை: குடும்பத்தகராறில் தந்தையுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நாகையில் நடந்தேறியுள்ளது.

Samayam Tamil 14 May 2019, 11:01 am
காதலித்து திருமணம் செய்த கணவரை தந்தையுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் நாகப்பட்டினத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil தந்தையுடன் சேர்ந்து கணவனை கல்லால் அடித்து, கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி
தந்தையுடன் சேர்ந்து கணவனை கல்லால் அடித்து, கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி


தரங்கம்பாடியை சேர்ந்த சதீஷ்குமாரும், அதேபகுதியைச் சேர்ந்த கலைமதியும் நீண்டகாலமாக காதலித்து, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் திருமணமான சில மாதங்களில் தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக அவர்களுடன் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சதீஷ்குமார் மற்றும் கலைமதி இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கலைமதி கணவரை கல்லால் கொடூரமாக தாக்கியுள்ளார். மேலும், அவருடைய தந்தை நாகராஜன், சதீஷ்குமாரை கத்தியால் குத்தியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த சதீஷ்குமாரை ஒருசிலர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சதீஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், சதீஷ்குமாரின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கலைமதி மற்றும் நாகராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கணவனை, தந்தையுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த இந்த சம்பவம் தரங்கம்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி