ஆப்நகரம்

கள்ளக்காதல்: கணவன் கொலை... மனைவி உட்பட 7 பேருக்கு நீதிமன்றம் தண்டனை..!

நெல்லையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி உட்பட 7 பேருக்கு கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Samayam Tamil 30 Jun 2022, 4:28 pm
நெல்லை அருகே 2016- ம் ஆண்டு கட்டிடத் தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனையும், 4 பேருக்கு 10 ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனையும் விதித்து நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்பளித்துள்ளது.
Samayam Tamil nellai news


நெல்லை மாவட்டம் பொட்டல் அருகே உள்ள அவனாப்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் கட்டிடத் தொழிலாளியாவார். இவரை கடந்த 2016ம் ஆண்டு இவரது மனைவி ஜானகி தனது கள்ளகாதலன் உள்பட 7 பேருடன் சேர்ந்து கொலை செய்துள்ளனர்.

இது தொடர்பாக தாலுகா காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ஜானகி, அவரது கள்ளகாதலன் சக்திவேல் மற்றும் உறவினர்கள் ராஜா, மாணிக்கம், சுடலை, அந்தோணியம்மாள், அந்தோணிராஜ் 7 பேரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நெல்லை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி. பன்னீர்செல்வம் இன்று அளித்த தீர்ப்பில் முக்கிய குற்றவாளியான பாக்கியராஜ் மனைவி ஜானகி, உறவினர் ராஜா ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், மேலும் உறவினர்காளான அந்தோணியம்மாள், அந்தோணிராஜ், சுடலை, மாணிக்கம் ஆகிய 4 பேருக்கும் 10 ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்பளித்தார். இந்த வழக்கில் ஆஜராகமல் தலைமறைவாக இருந்த சக்திவேலை போலீசார் கைது செய்துள்ள நிலையில் இவருக்கு தனியாக வழக்கு விசாரணை நடந்து வருகிறது .

120 இளம்பெண்கள்... 1900 படங்கள்... ஆபாச ரோமியோ காசியின் திடுக்கிடும் தகவல்

இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் சூரசங்கரவேல் வதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி