ஆப்நகரம்

அனுமதியின்றி டிரக்கிங்... கணவர் முன்பு இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்...

கோவை அருகே கணவருடன் வனப்பகுதியில் டிரக்கிங் சென்ற இளம்பெண்ணை காட்டு யானை மிதித்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 20 Jan 2020, 6:11 pm
கோவை மாவட்டம் கணபதி நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி புவனேஸ்வரி. பிரசாந்த் அப்பகுதியில் இரும்பு கடை நடத்தி வருகிறார். புவனேஸ்வரி, கண் மருத்துவமனையில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். இந்த தம்பதியர் அடிக்கடி அங்குள்ள வனப்பகுதியில் டிரக்கிங் செல்வது வழக்கம். அதுபோல நேற்று ( ஞாயிற்று கிழமை ) காலை இருவரும் சில நண்பர்களுடன் பெரியநாயக்கன் பாளையம் சரகத்துக்கு உட்பட்ட பாலமலை வனப்பகுதிக்கு டிரக்கிங் சென்றனர்.
Samayam Tamil கோவையில் டிரக்கிங் சென்ற இளம்பெண் காட்டு யானை மிதித்து பலி


இதற்காக முன் அனுமதியும் பெறவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்கள் குஞ்சூர் பகுதியில் சென்ற போது ஆண் காட்டு யானை ஒன்று எதிரே வந்துள்ளது. இதை கண்டதும் அனைவரும் அலறி அடித்து ஓட தொடங்கியுள்ளனர். அப்போது பிரசாந்தும், மற்றவர்களும் வேகமாக சென்று பாதுகாப்பான இடத்தில் நின்றனர்.

கூலி வேலை செய்யும் தாயை தவிக்க விட்டுச் சென்ற மாணவன்..! பூந்தமல்லியில் சோக சம்பவம்...

ஆனால் புவனேஸ்வரியால் மற்றவர்களின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் யானையின் பிடியில் சிக்கினார். பின்னர் பயத்தில் அலறிய அவரை அந்த யானை தும்பிக்கையினால் தூக்கி வீசியது. இதை கண்ட பிரசாந்தும், நண்பர்களும் கத்தி கூச்சலிட்டனர். அப்போதும் பின் வாங்காத யானை படுகாயம் அடைந்த புவனேஸ்வரியை காலால் மிதித்து விட்டு சென்றது.

இதையடுத்து தூரத்தில் இருந்த பிரசாந்த் மற்றும் நண்பர்களும் அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது, புவனேஸ்வரி உடல் நசுங்கிய நிலையில் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து பெரியநாயக்கன் பாளையம் வனச் சரகருக்கும், காவல் நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

நிர்பயா வழக்கு, உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!

அங்கு விரைந்த போலீசார் புவனேஸ்வரியின் சிதைந்த உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை நடத்த அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முன் அனுமதி பெறாமல் டிரக்கிங் சென்ற பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி