ஆப்நகரம்

சென்னையில் மற்றொரு அதிர்ச்சி; டிடிவி அலுவலகப் பெண்ணிடம் 5 சவரன் நகை வழிப்பறி!

டிடிவி தினகரன் அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண்ணிடம், வழிப்பறித் திருடர்கள் நகையை பறித்துச் சென்றுள்ளனர்.

TIMESOFINDIA.COM 8 May 2019, 3:43 pm
சென்னை திருவான்மியூரில் டிடிவி தினகரனின் அமமுக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நிர்வாக ஊழியராக பிரியதர்ஷினி பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன் தினம் இரவு, தனது கணவருடன் உணவருந்தச் சென்றுள்ளார்.
Samayam Tamil Chain Snatching


அப்போது அவரின் செயினைப் பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்த பிரியதர்ஷினி, நாங்கள் உணவருந்திய ஓட்டலுக்கு வெளியே நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

நான் வெளியே வந்த போது, திடீரென ஓடிவந்த அவர் எனது கழுத்தில் இருந்த 5 சவரன் செயினைப் பறித்துக் கொண்டு ஓடினார். அவரைத் தடுக்க முயற்சித்தேன். ஆனால் எனது கழுத்தில் ஏற்பட்ட காயத்தில் கவனம் செலுத்தியதில் தவறவிட்டு விட்டேன்.

எனது கணவரும், அங்கு நின்று கொண்டிருந்த நபர்களும் திருடனை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் தெருவில் முனையில் காத்திருந்த மோட்டார் சைக்கிள் நண்பர்களுடன் தப்பிச் சென்றுவிட்டார் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரியதர்ஷினிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து திருவான்மியூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனை வழக்காக பதிவு செய்து, சிசிடிவி காட்சிகள் உதவியுடன் விசாரித்து வருகின்றனர். இதற்காக ஓட்டலுக்குச் சென்று, அங்குள்ளவர்களிடமும் விசாரித்துக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்த செய்தி