ஆப்நகரம்

அரசு பேருந்தில் கணவன் இருக்கும்போதே பெண்ணிடம் சிலுமிஷம்..? போலீஸ்காரரின் துணிச்சல்

கோயம்பேடு செல்லும் அரசு பேருந்தில் பயணித்த பெண்ணை கணவர் இருக்கும் போதே சீண்டிய போலீஸ்காரரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 2 Oct 2022, 10:27 am
சென்னை கோயம்பேடு செல்லும் அரசு பேருந்தில் இரவு 30 பயணிகள் பயணித்துள்ளனர். அப்போது, தம்பதி இருவரது சீட்டுக்கு பின்னால் அமர்ந்திருந்த ஆவடி ஸ்டேஷன் போலீஸ்காரர் ஒருவர் முன்னாள் இருந்தவரது மனைவியை பாலியல் ரீதியாக சீண்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தனது கணவனிடம் கூறியுள்ளார்.
Samayam Tamil chennai bus


பின்னர் அந்த பெண்ணின் கணவர் எழுந்து போலீஸ்காரரிடம் முறையிட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் போலீஸ்காரர் தகாத வார்த்தைகளால் பெண்ணின் கணவரை திட்டியது மட்டுமல்லாமல் அடிக்கவும் கை ஓங்கிய சம்பவம் சக பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும், அந்த போலீஸ்காரர் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தில் குறுக்கிட்ட நடத்துனர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து பின்னர் அந்த தம்பதியை மட்டும் கீழே இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும், இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் போலீஸ்கரரிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

அடுத்த செய்தி