ஆப்நகரம்

கொண்டையால் சிக்கிய மருமகள்... மாமியாரை போட்டுத்தள்ளி விட்டு நாடகம்.. த்ரில் க்ரைம்

நெல்லை அருகே மாமியார் கொலை வழக்கில் மருமகள் ஆடிய நாடகம் அம்பலமாகியுள்ளது.

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 30 May 2023, 5:39 pm
திருநெல்வேலி மாவட்டம் வடுகன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் சண்முகவேல் - ராமலெட்சுமி (58) தம்பதி. இவர்களுக்கு ஒரு மகளும், ராமசாமி என்ற மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி கணவன் வீட்டில் வசித்து வருகிறார். ராமசாமிக்கு மகாலட்சுமி (27) என்ற மனைவியும் இரு பிள்ளைகளும் உள்ளனர்.
Samayam Tamil nellai crime news


இந்த நிலையில் மகாலட்சுமிக்கும் மாமியார் ராமலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் மாமனார் சண்முகவேல் மகனுக்கு தங்கள் இருக்கும் வீட்டுக்கு அருகே புதிய வீடு கட்டி கொடுத்துள்ளார். அந்த வீட்டில் ராமசாமியும், மகாலட்சுமியும் தனியாக குடித்தனம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு இரவு ராமலெட்சுமியின் வீட்டுக்குள் ஹெல்மெட் அணிந்துகொண்டு என்ற மர்ம நபர் தூங்கிக்கொண்டிருந்த ராமலட்சுமியை சரமாரியாக கட்டையால் தாக்கிவிட்டு கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்து சென்றுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் ராமலட்சுமியை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையே நெல்லை காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியபோது வீட்டின் சிசிடிவி-யை சோதனை செய்தனர்.


அந்த வீடியோவில், சம்பவம் நடந்த இரவு ஹெல்மெட் அணிந்து வருவது ஆண் கிடையாது பெண் என்பதும் அந்த பெண் ராமலட்சுமியின் மருமகள் மகாலட்சுமி என்பதும் தெரிய வந்தது. இது போலீசாருக்கு பகீர் கொடுத்தது. இதுகுறித்து போலீசார் விசாரணையில் தெரிய வந்ததாவது; மாமியார் மருமகளுக்கும் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்ததால் ஏற்கனவே பெரிய வீடு இருந்தும்கூட தனி வீட்டை கட்டிக்கொடுத்துள்ளார் சண்முகவேல்.

தனி வீட்டுக்கு சென்றும்கூட மாமியார் - மருமகள் சண்டை தொடர்ந்துகொண்டே இருந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மருமகள் மகாலட்சுமி சம்பவத்தன்று அடையாளம் தெரியாத அளவுக்கு ராமலட்சுமியின் வீட்டுக்குள் நுழைந்து கட்டையால் அடித்து தாக்கியுள்ளார். மேலும், பழியை திருடன் மீது போட்டுவிடுவதற்காக தங்க செயினை பறித்து வந்துள்ளார். ஆனால், சிசிடிவி- யில் சுலபமாக சிக்கிக்கொண்டார்.

இந்த நிலையில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மகாலட்சுமி மீது கொலை வழக்கை பதிவு செய்து கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி