ஆப்நகரம்

ஜூஸ் குடிக்க வருவாரு, போக போக நெருக்கமானோம்... தகாத உறவும், கணவன் கொலையும்...

கரூர் அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் காதலன் உள்பட 5 பேர் கைது

Samayam Tamil 13 Apr 2021, 7:31 pm
கரூர் அடுத்த பசுபதிபாளையம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட காந்திகிராமம் அருகே உள்ள வடக்குபாளையம் பகுதியில் கடந்த 2018 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ம் தேதி அன்று தலைப்பகுதியில் வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. அதனால் அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
Samayam Tamil accused and police


மேலும், குற்ற வழக்கு தொடர்பாக காவல்துறையினர் நாமக்கல், திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் கொலையான நபரின் புகைப்படத்தை ஒட்டி விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கொலை தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தொலைபேசி மூலம் பசுபதிபாளையம் காவல்துறையினருக்கு தகவல் வந்தது.

அதன் பேரில், திருப்பூர் சென்று விசாரணை மேற்கொண்டதில் கொல்லப்பட்ட நபர் சுப்புராஜ் என்பது தெரிய வந்ததது. இறந்த போன சுப்புராஜ் மனைவியிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டதில், சுப்புராஜ் குடும்பதுடன் திருப்பூரில் குளிர்ப்பான கடை ஒன்றினை நடத்தி வந்துள்ளதாகவும், அப்போது அந்த கடைக்கு அடிக்கடி வந்த கரூரில் உள்ள தொழிற்பேட்டை சேர்ந்த கனகராஜுக்கும், சுப்புராஜ் மனைவி அன்னலட்சுமிக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல்லில் 14 வயது சிறுமியை 12 பேர் பலாத்காரம்..! தமிழகத்தை உலுக்கிய அடுத்த சம்பவம்

தகாத உறவுக்கு இடையூறாக இருக்கும் கணவனை கொலை செய்ய திட்டம் தீட்டி அதன்படி மனைவியுடன் சேர்ந்து கரூர் வடக்குபாளையம் பகுதியில் கொலை செய்து சடலத்தை அங்கே விட்டு சென்றது தெரிய வந்தது.

காவல்துறையினரின் தீவிர விசாரணை மேற்கொண்டு சுமார் 3 வருடங்களுக்கு பின்னர் கொலை குற்றவாளிகள் கனகராஜ், பிரகாஷ், சந்தோஷ், சுப்புராஜ் மனைவி அன்னலட்சுமி, கொலையுண்டவரின் மாமியாரும், அன்னலெட்சுமியின் தாயாருமான ஜெயலலிதா உட்பட 5 பேரை பசுபதிபாளையம் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

அடுத்த செய்தி