ஆப்நகரம்

மேட்டூர் அருகே ஓடும் பேருந்தில் பெண் தற்கொலை முயற்சி

மேட்டூரில் குடும்ப தகராறு காரணமாக ஓடும் பேருந்தில் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொண்ட முன்னாள் ராணுவ வீரரின் மனைவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 11 Jul 2019, 3:13 pm
குடும்பத்தகராறு காரணமாக மேட்டூரில் ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil murder


சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த தொழிலாளர் இல்லப் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் இராணுவ வீரர் சந்தானம் (50). இராணுவ பணியில் ஓய்வு பெற்ற இவர் மேட்டூர் மின்வாரிய பணிமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அகல்யா(48).

இவர்களின் மகள் காயத்ரிக்கு(23) திருமணம் செய்ததில் உள்ள தகராறு காரணமாக தாயாரின் வீட்டிற்கு வருவதில்லை. இதனால் இவரது தாயார் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் சேலம் சென்று விட்டு தனியார் பேருந்தில் மேட்டூர் திரும்பிய அகல்யா குள்ளமுடையானுர் அருகே தனது கையில் வைத்திருந்த பேனா கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். கழுத்தில் ரத்தம் பீறிட்டு வந்ததைக் கண்ட பயணிகள் அலறினர். இதனையடுத்து அகல்யா சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஓடும் பேருந்தில் பெண் ஒருவா் தற்கொலைக்கு முயன்றது குறித்து கருமலைக் கூடல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் திடீரென தனது கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் மேட்டூரில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி