ஆப்நகரம்

5 லட்சம் கடனுக்கு 35 லட்சம் வட்டி... கந்து வட்டியால் தீக்குளித்த பெண்..!

சென்னை பெரம்பூர் அருகே கந்து வட்டி கடன் வாங்கிய பெண் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 7 May 2022, 4:09 pm
சென்னை பெரம்பூர் புளியந்தோப்பு பகுதியில் வசித்துவரும் சித்ரா கொரோனா காரணமாக கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு சிறுக சிறுக ஏறத்தாழ 5 லட்சம் ரங்கநாயகி என்ற பெண்ணிடம் கடன் வாங்கியுள்ளார்.
Samayam Tamil woman suicide attempt


தற்போது கடனை செலுத்த முடியாத காரணத்தினால் வட்டி அதிகரித்து 35 லட்சம் கட்ட சொல்லியும், வீட்டை தனது பேருக்கு எழுதி வைக்குமாறும் ரங்கநாயகி மிரட்டியுள்ளார். கந்துவட்டி ரங்கநாயகியும் அவரது கணவர் சேகர் மகன் சுரேஷ் உள்ளிட்டோர் கூட்டாக சேர்ந்து மிரட்டி உள்ளனர்.

மேலும் சித்ராவையும், அவரது இரு மகள்களையும் மிரட்டியதன் காரணமாக மனமுடைந்து நேற்று முன் தினம் சித்ரா மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி கொண்டார்.

'சேர்ந்து குளிக்கும் அளவுக்கு நெருக்கம்'... விஜே சித்ரா பற்றி நடிகை சொன்ன ரகசியம்...

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் புலியந்தோப்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் விரைந்து வந்த போலீசார் சித்ராவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமமனையில் உள்ள தீ காய தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். அங்கு சித்ராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, சிகிச்சை பெற்று வரும் சித்ரா பேசிய வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி