ஆப்நகரம்

ஆண் நண்பருடன் கிசுகிசு போன் கால்... காதல் மனைவியை அடித்தே கொன்ற ஆட்டோ டிரைவர்

சென்னை கண்ணகி நகரில் காதல் மனைவியை அடித்து கொன்ற ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

Samayam Tamil 24 Apr 2022, 11:45 am
சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர் புகழ்கொடி. இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கும் சரிதா என்ற பெண்ணுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது. இருவரும் தங்களது பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தையின்றி கண்ணகி நகரில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சரிதா தனது ஆண் நண்பர் ஒருவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது.
Samayam Tamil மனைவியை கொன்ற கணவன்


இதை கண்ட புகழ்கொடி சரிதாவை கண்டித்துள்ளார். அதற்கு சரிதா, நாங்கள் இருவரும் சாதாரண நண்பர்கள்தான் என கூறியுள்ளார். இருப்பினும், இனிமேல் பேசக்கூடாது என புகழ்கொடி கூறியுள்ளார். சரிதாவும் அதற்கு சரி என கூறவே பிரச்சினை முடிந்தது. ஆனால், ஆண் நண்பரிடம் பேசுவதை நிறுத்தாமல் சரிதா தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவு புகழ்கொடி தூங்குவதைப்போல நடித்துள்ளார். இது தெரியாமல் சரிதா தனது ஆண் நண்பருக்கு போன் போட்டு நைசாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த புகழ்கொடி சரிதாவை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதனால் நிலைகுலைந்து போன சரிதா படுக்கையில் மயங்கியுள்ளார். பின்னர் புகழ்கொடி தூங்கிவிட்டார்.

ச்சீ... நள்ளிரவில் பிளஸ்- 1 மாணவியை... கணவனுக்கு உதவிய மனைவி.. என்ன நடந்தது?

காலையில் எழுந்து பார்த்தபோதுதான் சரிதா பேச்சு மூச்சின்றி கிடப்பது தெரிய வந்தது. உடனே அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று சரிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சரிதாவின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் புகழ்கொடியுடன் விசாரணை நடத்திய கண்ணகி நகர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி