ஆப்நகரம்

நீ இந்த சாதி தான? நம்பி வந்த மனைவியை சீரழித்த கணவன்! தருமபுரி பரபரப்பு

தருமபுரி அருகே சாதி பெயரை கூறி கணவன் அடித்து துன்புறுத்தி வந்ததால் இளம்பொன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 5 Oct 2020, 8:35 pm
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள ஆலமரத்து பட்டியைச் சேர்ந்த மணிஷ் என்ற இளைஞரும் சௌமியாவும் காதலித்து கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில் சாதியை காரணம் காட்டி சௌமியாவின் கணவர் மணிஷ் அடித்தும் துன்புறுத்தியும் சாதிப் பெயரைச் சொல்லி கேவலப்படுத்தியும் சித்திரவதை செய்து வந்துள்ளார்.
Samayam Tamil couple image


இதையடுத்து அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன்பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சௌமியா கடந்த 15 நாட்களுக்கு முன்பு விஷமருந்திய நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

இந்நிலையில், சௌமியாவின் உயிரிழப்புக்கு காரணமான அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மகளோட நண்பன் என்பதால் வீட்டில் விட்டோம், பெட்ரூம் வரைக்கும் வந்துட்டான்..!

தகவலறிந்து வந்த தருமபுரி வருவாய் கோட்டாட்சியர், அரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி ஆகியோரின் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு சௌமியாவின் கணவர் மற்றும் அவர் குடும்பத்தினர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவதாக உறுதி அளித்தனர். அதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டதால், சௌமியாவின் உடல் அவர்களது பெற்றோரிடையே ஒப்படைக்கப்பட்டு தருமபுரி மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

அடுத்த செய்தி