ஆப்நகரம்

'இவ ராசியே சரி இல்ல'... புதுப்பெண் தீ குளித்து தற்கொலை..! மதுரையில் சோகம்

மதுரை அருகே உறவினர்கள் ராசி இல்லாதவள் என திட்டியதால் மனமுனைந்த பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்திற் ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 1 Nov 2020, 2:27 pm
நடப்பெதெல்லாம் விதி படியே என்று கூறுபவர்கள், கெட்ட காரியங்களுக்கு மட்டும் பிறர் மீது பழியை போட்டு மனதை நோகடிப்பது எப்போது மாறும் என்று தெரியவில்லை. கனவுகளோடு கணவன் வீட்டுக்கு வந்த புதுப்பெண் ராசியில்லாதவள் பட்டம் பெற்று உயிரை மாய்துகொடுத்துதான் மிச்சம். அப்படி என்னதான் நடந்தது?
Samayam Tamil புதுப்பெண் தற்கொலை


மதுரை மாவட்டம் திருமங்கலம் கல்லணை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (25). போஸ்ட் மேனாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஜெயகுமாருக்கும் திருப்புவனத்தை சேர்ந்த காளீஸ்வரி (23) என்ற பெண்ணுக்கும் நிச்சயம் பேசி முடித்தனர். அதனையடுத்து, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் திருமணமும் நடந்து முடிந்தது.

கணவன் வீட்டுக்கு வலது காலை எடுத்து வைத்து விளக்கேற்றி புது வாழ்க்கையில் அடியெடுத்து வைத்ததுதான் தாமதம். காளீஸ்வரி மீது இடி விழ தொடங்கியது. அன்று முதல் சில நாட்கள் கழித்து ஜெயக்குமாரின் பாட்டி விபத்தில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அப்போதே காளீஸ்வரியை பற்றி சலசலப்புகள் ஆரம்பித்துள்ளன.

அதையடுத்து, ஜெயக்குமாரின் மாமாவுக்கும் விபத்து ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் காளீஸ்வரி ராசி இல்லாதவள் என்று ஜெயக்குமாரின் வீட்டார் திட்ட தொடங்கினர். மனமுடைந்த காளீஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத போது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

வங்கி வேலை கிடைத்ததால் நேர்த்திக்கடனாக உயிரை விட்ட நாகர்கோவில் வாலிபர்..!

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே காளீஸ்வரி உயிரிழந்து விட்டார். இதுகுறித்து திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயக்குமாரின் பாட்டியும், மாமாவும் சிகிச்சை முடிவில் வீடு திரும்பி விடுவர். ஆனால் காளீஸ்வரி...

அடுத்த செய்தி