ஆப்நகரம்

ஜாக்கெட் பிடிக்காததால் இளம்பெண் தற்கொலை... அனாதைகளான குழந்தைகள்...

ஹைதராபாத்தில் பெண் ஒருவர் தையல் தொழிலாளியான கணவர் தனது விருப்பப்படி ஜாக்கெட் தைக்காததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Dec 2021, 2:40 pm
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அமர்பேட் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். இவரது மனைவி விஜயலக்ஷ்மி (35). இந்த தம்பதிக்கு பள்ளிக்கு செல்லும் வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஸ்ரீனிவாஸ் தையல் தொழில் செய்து வருகிறார். பெண்களுக்கான ஆடைகளை தைத்தும், புடவைகளை வாங்கி வீடு வீடாக டோர் டெலிவரியில் விற்பனை செய்தும் வருகிறார்.
Samayam Tamil hyderabad woman suicide


இந்த நிலையில், ஸ்ரீனிவாஸ் விஜயலக்ஷ்மிக்கு புதிதாக ஜாக்கெட் தைத்து கொடுத்துள்ளார். ஆனால், அந்த ஜாக்கெட் விஜலக்ஷ்மிக்கு பிடிக்காததால் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது விஜயலக்ஷ்மி அதே ஜாக்கெட்டை திரும்ப ஆல்ட்ரேஷன் செய்து கொடுக்குமாறு கணவனிடம் கேட்டுள்ளார். அதற்கு ஸ்ரீனிவாஸ், ' உனக்கு பிடித்ததை போல நீயே தைத்துக்கொள்' என்று காட்டமாக கூறிவிட்டு வெளியில் சென்றுவிட்டார்.

இதனால் மனமுடைந்த விஜயலக்ஷ்மி படுக்கை அறைக்கு சென்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த குழந்தைகள் உள்பக்கமாக பூட்டி கிடந்த படுக்கையறையின் கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே வெளியில் சென்ற ஸ்ரீனிவாஸ் வீட்டுக்கு வந்தபோது, பிள்ளைகள் இருவரும், பூட்டியிருக்கும் அறைக்குள் அம்மா இருந்துகொண்டு திறக்க மாட்டுகிறார் என்று தெரிவித்துள்ளனர்.

பாலியல் கொடுமையால் ஆசிரியை பள்ளியிலேயே தற்கொலை..! திருவாரூரில் அதிர்ச்சி

இந்நிலையில், ஸ்ரீனிவாசும் கதவை தட்டிப்பார்த்து பின்னர் கதவை உடைத்து சென்றபோது விஜயலக்ஷ்மி தூக்கில் பிணமாக கிடந்ததை பார்த்து பேரதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள அமர்பேட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜாக்கெட் பிடிக்காததால் இரு குழந்தைகளின் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி